எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் புதிய கல்வித் தொலைக்காட்சியினை முழுமையான அளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
கல்வித்தொலைக்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கல்வித்தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய அதிநவீன கேமராக்கள், தொழில்நுட்ப கருவிகள், ஆளில்லா பறக்கும் கண்காணிப்பு கேமரா போன்ற பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் வாங்குவதற்கென ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வித் தொலைக்காட்சி அரசு கேபிளில் 200வது அலைவரிசையில் ஒளிபரப்பாகும். இந்த அலைவரிசை 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பு செய்யும்.
வணிக நோக்கில் செயல்படும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் போட்டி போடும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள், படைப்பாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் நிபுணர்களின் பதில்கள், பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்புகள், புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் இடம் பெறும்.
பொதுவாக, மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. எனவே, அவ்வப்போது வீட்டில் தொலைக்காட்சி பார்க்கும் மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோர்கள் அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால், இந்த கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதன் காரணமாக, மாணவர்கள் தங்கள் படிப்புக்கு உதவும் செய்திகளையும், தகவல் களையும் தொலைக்காட்சி மூலமாகவும் கண்டு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இனி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதை பெற்றோர்களும் ஊக்கப்படுத்துவார்கள். எனவே, கல்வித் தொலைக்காட்சி அலைவரிசையை மாணாக்கர்கள் பார்த்து, அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியப் பெருமக்களும், உங்கள் பெற்றோர்களும் உங்களுக்கு நல்ல வழிகளை காட்டுபவர்கள்.
தற்போதுள்ள சூழ்நிலையில், மாணாக்கர்கள் பல்வேறு தேவையற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செல்போன்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றில் தங்கள் நேரத்தை செலவிடாமல், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பயனுள்ள நிகழ்ச்சிகளைக் கண்டு வாழ்க்கையில் உயர்வு பெற வேண்டும்.
இதன்மூலம் அறிவுசார்ந்த தமிழ் சமுதாயத்தை உருவாக்கிட முடியும். படிக்கும்பொழுதே, மருத்துவர், பொறியாளர், விளையாட்டு வீரர், ஆசிரியர், மத்திய அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், இந்திய ராணுவத்தில் பணியாற்றல், தொழில் முதலீட்டாளராகுதல், வங்கிப் பணியில் அமர்தல் என்று, எதிர்காலத்தில் அடைய வேண்டிய உயரிய குறிக்கோள்களை நாம் சிறு வயதிலேயே கொண்டிருக்க வேண்டும்.
இதனால் படிக்கும் காலங்களில் முழு கவனம் செலுத்தி நமது குறிக்கோளை எய்திட வேண்டும். ஆசிரியர்கள் அன்றாடம் நடத்தும் பாடங்களை அன்றைய தினமே படித்தால் தேர்வினை மிக எளிதாக எழுதி, அதிக மதிப்பெண்களை பெறமுடியும். நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்க வேண்டிய அவசியத்தைத் தவிர்க்கலாம். சுவரை வைத்துத்தான் சித்திரம் என்பார்கள், எனவே, படிப்பு மட்டுமன்றி, சிறந்த ஆரோக்கியமான தேகம் நமக்குத் தேவை. எனவே, உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் பள்ளியில் உள்ள நேரங்களில், பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகள், திறன்வளர்ப்பு குறித்த பயிற்சிகள், பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவை இன்றையதினம் தொடங்கப்பட்டுள்ள கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம் பெறும். இதனை மாணாக்கர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்படுவதன் மூலம், கல்வித் துறை சார்ந்த அரசின் அனைத்து செயல்பாடுகளையும், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இயலும்.
மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், இந்த புதிய கல்வித் தொலைக்காட்சியினை முழுமையான அளவு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த கல்வி தொலைக்காட்சியை உருவாக்குவதற்கு அரும்பாடுபட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் அவரோடு இணைந்து பணியாற்றிய முதன்மைச் செயலாளருக்கும், அவருக்கு துணையாக இருந்த பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கும், மற்றவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைக்குக் கல்வி கற்பது சாதாரண விஷயம் அல்ல. தற்போது நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுபவர்கள் பலர் உண்டு. நாங்கள் படித்த காலம் வேறு, நீங்கள் படிக்கின்ற காலம் வேறு. இன்றைய காலகட்டத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறக்கூடிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால், அறிவுசார்ந்த இந்த தொலைக்காட்சியை உங்களுக்கு அர்ப்பணித்திருக்கின்றோம். இதனை நல்லமுறையில் பயன்படுத்த கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.