முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவின் 3-வது சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது சந்திரயான்-2 விண்கலம்

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

சந்திரயான்- 2 விண்கலம் நிலவின் 3-வது சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது, கடந்த 14-ம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் தொடங்கியது.

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம்,  20-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது. அதன்பின் சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. நிலவின் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வரும் சந்திராயன் 2, நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது.

இந்த நிலையில் நிலவின் 3-வது சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்- 2 விண்கலம் நேற்று  நுழைந்தது. அந்த பாதையில் விண்கலம் சரியான முறையில் பயணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் பயணத்திட்டத்துக்கு செயல்பாடுகள் அமைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் திருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் வரும் 30-ம் தேதி சந்திரயான்- 2 விண்கலம் இறுதி மாற்றத்தை அடையும். இறுதியாக செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து