முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் - மாயாவதி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு ஆரம்பம் முதலே ஆதரவு தெரிவித்து வருபவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி. இந்த நிலையில், காஷ்மீர் பிரச்சினைக்கு மூல காரணமே காங்கிரஸ் தான் என்று விமர்சித்துள்ளார்.

லக்னோவில் நடைபெற்ற தனது கட்சி நிகழ்ச்சியில் பேசிய மாயாவதி கூறியதாவது:-

காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மட்டுமே ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு மூல காரணம்.  காங்கிரஸ் அதன் ஆட்சிக்காலத்தில் 370-வது சட்டப்பிரிவை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால்,  ஜம்மு-காஷ்மீரின் நிலைமை இன்று சிறப்பாக இருந்திருக்கும் ; இதன் பேரில் பா.ஜ.க-வுக்கு அரசியல் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்காது என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து