முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி வழக்கு: நவம்பரில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வரும் நவம்பர் மாதம் இறுதி தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை இந்து அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து ராம்லல்லா, நிர்மோகி அக்காரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய 3 அமைப்புகளுக்கும் வழங்கி உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் முதலில் சமரசமாக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தது. சம்மந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி முடிவு காண 3 பேர் கொண்ட குழுவையும் கடந்த மார்ச் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.

3 பேர் கொண்ட குழு கடந்த 5 மாதங்களாக சம்மந்தப்பட்ட தரப்புகள் மத்தியில் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியவில்லை என்று மத்தியஸ்தர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தனர்.

சமரச பேச்சு தோல்வி அடைந்ததை தொடர்ந்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார். அதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சந்திரசூட், அசோக்பூஷன், பாப்டே, அப்துல்நாசிர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வுமுன்பு கடந்த 6-ந்தேதி முதல் நாள் தோறும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த விசாரணையின் போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். 16 நாட்கள் நடந்த இந்த விசாரணையில் இந்து அமைப்புகளின் வாதம் நிறைவடைந்தது. ராம்லல்லா, நிர்மோகி அகாரா ஆகிய அமைப்புகளின் வக்கீல்கள் வாதமும் நிறைவு பெற்றது.

சர்ச்சைக்குரிய பகுதியில் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக இந்து அமைப்பினர் தங்களது வாதத்தில் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகளின் வாதம் தொடங்குகிறது. 2-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அவர்களது வாதம் தொடங்குகிறது. இந்த வாதங்களுக்கு பிறகு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும். அநேகமாக நவம்பர் மாதம் இறுதி தீர்ப்பு வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து