முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 பொதுத் துறை வங்கி இணைப்புகளால் வங்கி ஊழியர்களுக்கு வேலையிழப்பு ஏற்படாது - மத்திய நிதித்துறை செயலாளர் திட்டவட்டம்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 10 பொதுத் துறை வங்கி இணைப்புகளால் வங்கி ஊழியர்களுக்கு வேலையிழப்பு ஏற்படாது என்றும், அதிக வேலைவாய்ப்புகள் பெருகத்தான் செய்யும் என்றும் மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.

வங்கிகள் இணைப்பு

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பொதுத் துறை வங்கிகள் இணைப்பு பற்றியும் நேற்று முன்தினம் அவர் அறிவித்தார். அதன்படி 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதாக தெரிவித்த அவர், பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு நாட்டில் 10 பொதுத் துறை வங்கிகளை இணைப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் வங்கி யூனியன் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் ஊழியர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

நிதித்துறை செயலாளர் மறுப்பு

இந்த நிலையில், நிதி செயலாளர் ராஜீவ் குமார் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,

பரோடா வங்கிகளுடன் 3 வங்கிகளை இணைத்த எடுத்துக் காட்டுகளை கவனியுங்கள். இதே போன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் மற்ற வங்கிகளை இணைத்த பொழுதும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை என்று எதுவும் ஏற்படவில்லை. இது வங்கி ஊழியர்களுக்கு சிறந்த வசதிகளையே வழங்கும். அடுத்த 5 வருடங்களில் 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைய வேண்டும். அதனால் நாட்டில் பொதுத் துறை வங்கிகளை இணைப்பது என்பது கட்டாயம். ஒரு தூய்மையான மற்றும் பயனுள்ள வங்கி நடைமுறையை நீங்கள் பெற வேண்டும். கடந்த 2017-ம் ஆண்டில் 27 பொது துறை வங்கிகள் இருந்தன. ஆனால் 12 பொது துறை வங்கிகளே இப்பொழுது உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

இந்த பொது துறை வங்கி இணைப்புகள் சிறிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பலனையே ஏற்படுத்தும். அவர்களுக்கு பணி இடமாறுதலுக்கான வாய்ப்புகளும் அதிக அளவில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி இணைப்புகளால் வடக்கில் இருந்து தெற்கேயும் மற்றும் பிற வழிகளிலும் ஊழியர்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். எந்தவொரு பிரச்சனை என்றாலும் அதற்கு தீர்வு காண அரசாங்கம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு வேலையிழப்பு ஏற்படாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அமைச்சர் பாண்டியராஜன் கருத்து

வங்கிகள் இணைப்பால் ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். எனினும், அவர்களுடைய சந்தேகம் தீர்க்கப்பட வேண்டியது அவசியம். அதனை தெளிவுப்படுத்துவது என்பது மத்திய அரசின் கடமை என்று தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜனும் கூறியுள்ளார். தகவல் தொழில் நுட்பம், ஆட்டோமொபைல் துறை பாதிப்பு என்பது தற்காலிகம் தான். விரைவில் இதிலிருந்து மீண்டு இந்திய பொருளாதாரம் நல்ல நிலைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து