முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

சென்னை : ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதிநிலை தொடர்பாக மன்மோகன்சிங் தெரிவித்த கருத்துக்களை கேட்டுக் கொள்கிறேன். அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். ஆட்டோமொபைல் துறை பின்னடைவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு நிர்வாக வசதிக்காக பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதால் ஒருவர் கூட வேலையிழக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து