எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : இந்தியா முழுவதும் ஒரே ரேசன் கார்டு முறையை அறிமுகம் செய்வது தொடர்பாக டெல்லியில் நேற்று மாநில அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
மத்திய அரசு சில முக்கிய திட்டங்கள், சேவைகளை நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான திட்டமாக மாற்றி வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் “ஒரே ரேசன் கார்டு” அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது ஒவ்வொரு மாநிலமும், தங்களது துறைகள் மூலம் பொதுமக்கள் ரேசன் கடைகளில் மானிய விலையில் பொருட்களை வாங்குவதற்கு வெவ்வேறு விதமான நடைமுறைகளை கடைபிடித்து வருகிறது. வடமாநிலங்களில் பொது வினியோகத் திட்டத்தில் கோதுமை சார்ந்த உணவுப் பொருட்களுக்கு முக்கியத் துவம் கொடுக்கும் வகையில் ரேசன் கடைகள் இயங்குகின்றன.
ஆனால் தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் அரிசியை வழங்கும் வகையில் பொதுவினியோகத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து “ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு விரும்புகிறது.
மத்திய அரசின் தீவிர முயற்சி காரணமாக ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 10 மாநிலங்கள், “ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு” திட் டத்தில் தங்களை இணைத்துள்ளன. மற்ற மாநிலங்களையும் இந்த பொது வினியோக திட்டத்துக்குள் இணைக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது “ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு” திட்டம் அமல் படுத்தப்பட்டால் எத்தகைய இடையூறுகள் ஏற்படும்? அந்த இடையூறுகளை எப்படி தவிர்க்கலாம்? என்று விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் “ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு” திட்டம் பற்றி விவாதிக்க நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி விஞ்ஞான் பவனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மாநில நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, பொது வினியோகத்துறை அதிகாரிகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் “ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம் பற்றி விவாதித்தனர். அதன்பின்னர் இந்த திட்டத்தை எதிர்காலத்தில் எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் அனைத்து மாநிலங்களும் விரைவில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு திட்டம் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று பல்வேறு தரப்பு நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் அரிசி வினியோகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் ஒரே விதமான கார்டு கொண்டு வந்தால் அது தமிழகத்தின் உணவுத்துறை திட்டங்களை முழுமையாக சிதைத்து விடக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டால், அது தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு காரணம், தமிழ்நாட்டு மக்களில் அனைத்துத் தரப்பினரும் ஏதாவது ஒரு பொருளை ரேசன் கடைகளில் இருந்து பெறுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
ஏழை-எளிய மக்கள் அரிசியையும், நடுத்தர மக்கள் மற்ற பொருட்களையும் ரேசன் கடைகளில் இருந்து வாங்குகிறார்கள். ஒரே ரேசன் கார்டு திட்டம் வந்தால் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் அது பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு திட்டத்தை தமிழக அரசு ஏற்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இவை தவிர ரேசன் கார்டுகள் மூலம் பல மக்கள் நல திட்டங்களையும், இலவச திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டத்தால் தமிழ்நாட்டில் கடும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக கருத்து உள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் ரேசன் அட்டைகள் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டு விட்டதாலும், குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதாலும் ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு திட்டத்தை தமிழக அரசால் மிக, மிக எளிதாக அமல்படுத்த முடியும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த திட்டத்தை கொண்டு வர முடியுமா? என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.