முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சர் செங்கோட்டையன் இன்று வழங்குகிறார்

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் இன்று நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் 377 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டு தோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக அளவில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு 377 பேர் தேர்வாகி உள்ளனர். பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 165 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 165, தனியார் பள்ளிகளில் 32, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 2, மாற்றுத்திறன் ஆசிரியர்கள் 3, மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் 10 பேராசிரியர்கள் என 377 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. விருதுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்குகிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ரூ.10 ஆயிரம் ரொக்கம், 36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாகும். இந்த விழாவில் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து