முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் கடல் அலையில் சிக்கி மாயம்:

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,-  கடலூரிலிருந்து புதிய நாட்டு படகை வாங்கிகொண்டு கடல் வழியாக ராமேசுவரம் நோக்கி வந்த ராமேசுவரம் மீனவர்கள்  படகுடன் கடல் அலையில் சிக்கி 8 மீனவர்கள் மாயமானர்கள்.மாயமான மீனவர்களை தேடிக்கண்டுபிடிக்ககோரி மீனவர்களின் குடும்பத்தினர் ராமேசுவரம் தாலுகா அலுவலகம் முன்பு  நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்த உமாகாந்த்,காளிதாஸ்,முனியசாமி,ரஞ்சித்குமார்,மதன், இலங்கேஸ்வரன்,தரகுடியான் உள்பட  பத்து மீனவர்கள் கடலூரில் இருந்து புதிய நாட்டு படகு ஒன்று செவ்வாய்க் கிழமை வாங்கினார்கள். பின்னர் இவர்கள் நாட்டு படகை பூஜை செய்து கடல் வழியாக ராமேஸ்வரம் பகுதியை நோக்கி  வந்து கொண்டிருந்தனர்.அப்போது மல்லிபட்டிணத்தில் இருந்து 15  மைல் நாட்டிக்கல் தூரத்தில் நடுக்கடலில் வந்துகொண்டிருந்தபோது திடீரென கடலில் பலத்த காற்றுடன் சூறை காற்று வீசியது.இதில் கடல் அலையில் சிக்கி இந்த மீனவர்கள் வந்த படகு கடலில் மூழ்கியது. பின்னர் படகிலிருந்து மீனவர்கள் 10 பேரும் கடலில் மூழ்கினார்கள்.இந்த நிலையில் படகிலிருந்த மீனவர்கள் உமாகாந்த் மற்றும் காளிதாஸ் ஆகிய இருவர் கடலில் தத்தளித்து நீந்திக்கொண்டு இருந்துள்ளனர்.அப்போது மல்லிபட்டிணம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இவர்களை மீட்டு அதிஷ்டவசமாக உயிருடன் நேற்று கரைக்கு அழைத்து வந்தனர்.அதன் பின்னர் இரண்டு மீனவர்களையும் அப்பகுதி மீனவர்கள்  கிகிச்சைக்காக அப்பகுதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேலும் இது குறித்து சம்பவம் தெரிந்து  போலீஸார்கள் மருத்துமனைக்கு சென்று மீனவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமேசுவரம் பகுதி மீன்வளத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள்,மீனவர்களின் குடும்பத்தினர்களுக்கு தகவல்கள் தெரிவித்தனர்.மேலும் இது குறித்து தகவல் அறிந்த   8 மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாயமான மீனவர்கள் தேடிக்கண்டுபிடிக்ககோரி நேற்று மாலை ராமேசுவரம் தாலுகா அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.  4 மணியிலிருந்து நடந்த சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் மீனவர்களை தேடிக்கண்டு பிடிக்கும் பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து சமரசம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.மாலை 7 மணி வரை சாலை மறியல் போராட்டம் தொடர்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் நூற்றுக்கு மேற்பட்ட வாகனம் நின்றன.இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து