எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என்று சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் அதிபர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.
கடந்த 4-ம் தேதி சான் பிரான்சிஸ்கோ-வில், வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக "யாதும் ஊரே" என்ற திட்டத்தினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகெங்கும் சென்று தமிழரின் பண்பாட்டுச் சிறப்பையும், அறிவுத் திறத்தையும் பறைசாற்றி தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்து வருகின்றீர்கள். உலகில் எந்த மூலையில் இருந்தாலும், உங்கள் உயிராய் தமிழும், உள்ளமெல்லாம் தமிழ்நாடும் விளங்குகிறது என்பதை நான் அறிவேன். உலகின் மாபெரும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், புத்தொழில்கள் என துறைகள்தோறும் சாதனைகள் செய்து பல நாடுகளில், புதிய தொழில் பலவற்றையும் துவக்கி கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உழைப்பால் தமிழகம் உயர்ந்து விளங்குகிறது.
இந்தியாவின் சிறந்த மாநிலமாகிய தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் சிறப்பிக்கும் பொருட்டு, உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்களின் சீரிய ஆலோசனைகளைப் பெறவும், தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம். உங்களைத் தேடி தமிழ்நாடு அரசு சார்பில் முதல் முறையாக பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் என்ற முறையில் நான் இங்கு வருகை தந்துள்ளேன்.
உலகெங்கும் வாழும் தமிழர்களை நினைத்திட, ஒரு புதிய உறவுப்பாலம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் "யாதும் ஊரே" என்ற புதிய திட்டத்தினை நியூயார்க்கில் துவக்கி வைத்தேன். தமிழ்நாடு அரசு தொழில் துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்தில் "யாதும் ஊரே" என்ற தனித் தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் முதலீடு, ஆலோசனைகள் நேரடியாக தமிழ்நாடு அரசை வந்தடையும். நீங்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறி, என்று சொல்லக்கூடிய ஒற்றைச் சாளர முறையில் அனைத்து அனுமதிகளும் வழங்கப்படும். நிலையான ஆட்சி, சிறப்பான நிர்வாகம், அமைதியான சூழல், திறன்மிகு மனித வளம், ஈடு இணையில்லா உட்கட்டமைப்பு, தடையில்லா மின் விநியோகம், இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்கும் வகையிலான பூகோள அமைப்பு என தமிழ்நாட்டின் தனித்துவத்திற்கு, இங்கு விரும்பி வந்து தொழில் துவங்கும் பன்னாட்டு நிறுவனங்களே சான்று.
அறிவுத் திறமை, உழைப்பு இரண்டு அம்சங்களும் உள்ளவர்கள் தமிழர்கள். அந்த உழைப்பால் இன்று உயர்ந்து. அமெரிக்காவில் நீங்கள் பணிபுரிகின்றீர்கள், புதிய, புதிய தொழில்களை ஏற்படுத்தி இன்றைக்கு தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றீர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், கல்வியில் ஒரு சிறந்த மாநிலமாக இன்று விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பதிலே முதன்மையாக விளங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு தான். இன்றைக்கு உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 48.6 சதவீதமாக உயர்ந்திருக்கின்றது. அதற்கு காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கின்றபொழுது கல்வியில் புரட்சி, ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். அந்தப் புரட்சியும் மறுமலர்ச்சியும் தான் இன்றைக்கு உயர்கல்வி படிக்கின்ற மாணாக்கர்களின் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கின்றது.
அது மட்டுமல்ல, தமிழகத்திலே சிறப்பான கல்வி இருக்கின்ற காரணத்திலேதான், அமெரிக்காவிலே பலர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே கிடைக்கப்பெற்ற அறிவின், திறமையின் காரணமாக அறிவுப்பூர்வமான கல்வியை வளர்த்ததின் காரணமாக இன்றைக்கு வெளிநாட்டில்கூட தமிழர்களுடைய திறமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முடியாததை முடியும் என சாதிக்கக்கூடிய திறமை படைத்தவர்கள் தமிழர்கள், அந்தச் சக்தி தமிழர்களுக்கு இருக்கின்றது. சாதிக்கப் பிறந்தவர்கள் தமிழர்கள். அப்படி சாதிக்கப் பிறந்தவர்கள் இங்கே சாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதேபோல தமிழகத்திலும் நீங்கள் சாதிக்கக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.
தொழில் துறையைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே முதல் இடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கின்றது. சிறுதொழிலைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பது தமிழ்நாடு தான். அதேபோல், சிறுதொழில் மூலமாக அதிகமான வேலைவாய்ப்பு வழங்குவதிலும் இந்தியாவிலே முதலிடம் வகிப்பது தமிழ்நாடு தான். ஆகவே, ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி முதலீடு செய்து பெரிய தொழில் தான் செய்ய வேண்டும் என்ற நிலை கிடையாது. சிறிய, சிறிய தொழில்களில் முதலீடு செய்தால் கூட, அதற்கும் தமிழ்நாடு அரசு உங்களுக்கு துணை நிற்கும் என்று இந்த நேரத்தில் அழைப்பு விடுக்கின்றேன்.
இன்றைக்கு நாங்கள் அமெரிக்காவில் வந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றபொழுது, இந்தியாவில், முதன்மை இடத்தில் தமிழகம் வரவேண்டும் என்று தான் நினைத்தோம். ஆனால் உங்களையெல்லாம் பார்த்து பேசியபொழுது, உலக அளவிலேயே தமிழகத்தை முதன்மை இடத்தில் கொண்டுவர முடியும் என நம்பிக்கை பிறந்துள்ளது. அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். அமெரிக்காவில் வாழ்கின்ற தமிழர்கள் இன்றைக்கு தொழில் துறையிலும், மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்குகின்றார்கள், களில் பல லட்சம் பேர் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்களும், உங்களுடைய நண்பர்களும் தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு முன்வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றேன். இந்த நாட்டிலே நீங்கள் இருந்தாலும், உங்கள் உள்ளம் எல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். ஆகவே, தாய் தமிழகத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை நல்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.
-
3-ம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்: தமிழக அரசு
17 Apr 2024சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ச
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
17 Apr 2024சென்னை : சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித
-
அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
17 Apr 2024புதுடெல்லி : இந்தியாவில் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் : நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு
17 Apr 2024பெங்களூரு : நாட்டின் ஜனநாயகத்தை காக்க மோடியை வீழ்த்த வேண்டியது அவசியம் என்றும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
அமேதி, ரேபரேலி தொகுகளில் எதில் போட்டி? ராகுல் பதில்
17 Apr 2024காசியாபாத் : ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.