முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பேட்ஸ்மேன்கள் எனக்கு மரண பயத்தை காட்டினார்கள் - ஆஸி. முன்னாள் வீரர் பிரெட் லீ சொல்கிறார்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

அகமதாபாத் : இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மரண பயத்தை காட்டினார்கள் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் தனது அதிகவேக பந்து வீச்சால் அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடித்தவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ. இவர் ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராகவும், லீக் கிரிக்கெட் போட்டிகளில் சில அணிகளுக்கு பயிற்சியாளராகவும் உள்ளார். இந்நிலையில், பிரெட் லீ குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற காது கேட்பு செயல்திறன் குறை குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்நிகழ்ச்சியின் போது பிரெட் லீ கூறுகையில், தற்போதைய கிரிக்கெட் உலகில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பும்ராவை பொறுத்தவரை அவர் இந்த சகாப்தத்தின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும், வேகப்பந்து வீச்சு அரசர்களின் அரசராகவும் திகழ்கிறார் என புகழாரம் சூட்டினார். மேலும், பந்து வீச்சின் போது இந்திய பேட்ஸ்மேன்களில் யார் உங்களுக்கு மிகுந்த பயத்தை கொடுத்தது? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரெட் லீ, இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமணன், டிராவிட் மற்றும் மகேந்திர சிங் டோனி ஆகிய வீரர்களுக்கு பந்து வீசுவது மிகவும் கடுமையான செயல். ஆனால் பொதுவாக இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவருக்கும் எனக்கும் மரண பயத்தை ஏற்படுத்தினர் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து