முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா, ரஷ்யா கூட்டாக கப்பல் கட்ட வாய்ப்பு: புடின் தகவல்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து கூட்டாக கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகரில், நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்றார். அதில் புடின் பேசியதாவது:-

இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து கூட்டாக கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். சில கப்பல்களை நாங்கள் இணைந்து உருவாக்க வாய்ப்புள்ளது. கப்பல்களில் பகுதி அளவுக்கு ரஷ்யா கட்டும். அதை மெருகேற்றும் பணியை இந்திய கப்பல் கட்டும் தளங்கள் செய்யும். இந்தியாவின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றை ரஷ்யாவின் ரோஸ்நெட் நிறுவனம் வாங்கி உள்ளது. இதுபோல், ஒத்துழைப்புக்கான துறைகள் நிறைய உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து