முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவின் பால் விலை உயர்வை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டது. அதன்படி ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வதாக கடந்த 17-ம் தேதி ஆவின் நிறுவனம் அறிவிப்பாணையை வெளியிட்டது. 19-ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் இந்த விலை உயர்வை எதிர்த்து, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் பால் விலையை அரசு திடீரென உயர்த்தியதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆவின் பால் உயர்வை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, விவசாயிகள் ஒரு புறம் போராட்டம் நடத்தும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு பால் விலையை உயர்த்தியது. ஏன் அதனை எதிர்க்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் டாஸ்மாக் கடைக்கு செல்பவர்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எனவும் மனுதாரரிடம் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து, எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து