முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் தயாரிக்கும் ஆலையில் ஆய்வு அமெரிக்காவில் முதல்வருடன் தொழில்துறையினர் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

அமெரிக்காவில் பல்வேறு தொழில் நிறுவனத்தினர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்தனர்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பல்வேறு தொழில் நிறுவனத்தினர் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தங்கள் விருப்பத்தினை தெரிவித்தனர். முதல்வர் .எடப்பாடி கே.பழனிசாமியை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் பாய்ன்ட் கார்டு வென்சர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கிரிஸ் பானு , ஜோகோ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு, நியோ நிறுவனத்தின் சியோ கணேஷ் வி.ஐயர், அமெரிக்கா சைபர் சிஸ்டம்ஸ்  நிறுவனத்தின் தலைவர் ராஜ் சார்தனா மற்றும் ப்ரோஸ்ட் அண்டு சுலிவன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்கள் டேவிட் பிரிக்ஸ்டு, பாஸ்டன் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் அருண்ஸ்ரீசலம், அல்டியஸ் கேபிடல் இன்க் நிறுவனத்தைச் சார்ந்த பாலாஜி, பக்தவச்சலம் கிளரி நிறுவனத்தின் சி.இ.ஒ.  சி.டி.ஒ வெங்கட்ரங்கன் எவர்போர்ஸ். காம் நிறுவனத்தின் நிறுவனர் ஈஸ்வரன் ராமலிங்கம், கோகுலகிருஷ்ணன் மற்றும் தொழில் துறையினர் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது தொடர்பாக தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதவ்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5-ம் தேதி அமெரிக்கா நாட்டின், சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா நிறுவனத்திற்கு சென்று, சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கின்ற வகையிலும், காற்று மாசுபடுவதை குறைக்கின்ற வகையிலும், அந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இயங்கிடும் வாகனங்கள், பாட்டரிகள், எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆகிய பணிகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்க நாட்டின், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஏற்கனவே உள்ள மின்கட்டமைப்பில் மாசில்லா எரிசக்தியை எளிய முறையில் சேர்ப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்தும், அத்தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்தும் அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ப்ளூம் எனர்ஜி நிறுவனமானது, திட ஆக்சைடு எரிபொருள் செல்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் கே.ஆர். ஸ்ரீதர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளின் போது தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு, முதலமைச்சரின் செயலாளர்கள் முனைவர் எஸ். விஜயகுமார், ஜெயஸ்ரீ முரளிதரன், ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து