முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரியாவில் கனமழை - சூறாவளி: 17,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

சியோல்  : தென்கொரியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறாவளிக் காற்று காரணமாக நாட்டின் தென்பகுதிகள் மோசமாக பாதிப்படைந்துள்ளன.

இது குறித்து தென்கொரியப் பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், தென்கொரியாவின் தென் பகுதிகள் மற்றும் ஜெஜுவில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. வெள்ளப் பாதிப்பு பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் கீழே சரிந்துள்ளன. இதன் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமார் 17,000 வீடுகளில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சுமார் 89 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏராளமானவர்கள் அவர்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை கனமழை காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் இந்தப் புயல் காற்று தென்கொரியாவின் மேற்குப் பகுதி நோக்கி நகர்ந்து அதன் எல்லைகளில் அதிக மழைப் பொழிவை ஏற்படுத்தும் என்று வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் புயல், வடகொரியாவை நோக்கி நகர்ந்து செல்வதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. புயலின் சேதத்தை குறைப்பதற்காக வடகொரிய ராணுவத்தைத் தயார் நிலையில் இருக்குமாறு வடகொரிய அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து