முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய நம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் செயல்பட்டு வெற்றிகளை குவிக்க வேண்டும் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : புதிய நம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் செயல்பட்டு வெற்றிகளை குவிக்க இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவி்த்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

உலகில் எந்த நாடும் செய்திராத முயற்சியான நிலவின் தென் துருவப் பகுதிக்கு சந்திரயான் - 2 விண்கலத்தை ஏவும் திட்டத்திற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட இஸ்ரோவின் தலைவர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட அனைவரது முயற்சியும், உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இந்தத் திட்டத்தில் மட்டுமல்லாமல் மேலும் பல திட்டங்களிலும் கண்டிப்பாக பல வெற்றிகள் பெறுவார்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ளது. அவர்கள் புதுநம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் செயல்பட்டு வெற்றிகள் பல பெற என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து