முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர திட்டம் - சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தகவல்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சபரிமலை கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக தனிச்சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கேரள அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோவில் தொடர்பாக ரேவதி நாள் பி.ராமவர்ம ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது கேரள அரசின் வழக்கறிஞர் இந்த தகவலை வாய்மொழியாகத் தெரிவித்த நிலையில் அதனை நீதிபதி பதிவு செய்துகொண்டார். இந்நிலையில், நிருபர்களுக்கு பேட்டி அளித்த கேரள அரசு வழக்கறிஞர் பிரகாஷ், அந்த சட்டம் சபரிமலை கோவிலுக்கு மட்டுமன்றி திருவாங்கூர் தேவசம் போர்டின் கீழ் வரும் அனைத்து கோவில்களுக்கும் பொருந்தும் என்றும் சட்டம் தொடர்பான வரைவு மசோதா இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த சட்டம் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதை பாதிக்காது என்றும் அவர் கூறினார். தேவஸ்வம் போர்ட்டின் கீழ் 150-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து