முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார் - தெலுங்கானா கவர்னராக தமிழிசை பதவியேற்றார் - துணை முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தெலுங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜேந்திர சவுகான் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

தமிழக பா.ஜ.க.வின் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் இருந்து வந்தார். அவரின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கடந்த 1-ம் தேதி வெளியிட்டார். கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் தமிழிசை விடுவிக்கப்பட்டார்.

தமிழிசை கவர்னராக நியமிக்கப்பட்டதற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள தெலுங்கானா ராஜ்பவன் அதிகாரி வேதாந்தகிரியிடம் தமிழிசை சவுந்திரராஜன் நியமன ஆணையை பெற்று கொண்டனர். இதை தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை 11 மணியளவில் தெலுங்கானா கவர்னராக பதவியேற்றார். அவருக்கு தெலுங்கானா ஐகோர்ட்  தலைமை நீதிபதி ராஜேந்திர சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்காக கவர்னர் மாளிகையில் பிரம்மாண்டமான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, சுதீஷ், ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து