முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகா அணைகளில் இருந்து 77,000 கன அடி காவிரி நீர் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபிணி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள கே.ஆர்.எஸ்., கபிணி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளும் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக முழுமையாக நிரம்பின. இடையில் மழை நின்றிருந்தாலும் அணைகளுக்கு ஓரளவுக்கு நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக கேரளாவின் வயநாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி, கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 55,774 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 53,062 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட இந்த அணையில், 124.80 அடிக்கு நீர் முழுமையாக நிரம்பியுள்ளது. கே.ஆர்.எஸ்., கபிணி அணைகளில் இருந்து நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி தமிழகத்துக்கு மொத்தம் 77 ஆயிரத்து 420 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து