எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க உறுதியாக போட்டியிடும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருவேற்காட்டில் ஆர்.எம்.கே. கட்டுமான நிறுவனத்தின் ஆர்.எம்.கே. சோழா கார்டன்சின் கிளப் அவுஸை துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று திறந்துவைத்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு வீடு எப்படி சுகாதாரமாக காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தோடு இந்த கிளப் அவுஸ் வளாகத்தை முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.முனிரத்தினம் உருவாக்கியுள்ளார். ஜிம், மருத்துவ வசதிகள், வீடுகளை விட்டு வெளியே யாரும் செல்லாத அளவுக்கு அனைத்து அம்சங்களும் உள்ளடக்கிய வகையில் நட்சத்திர ஓட்டல்களை போல வீடுகளை கட்டி அமைத்துள்ளார். அவருடைய வழியை மற்ற கட்டுமானத்துறையினரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- திருமழிசையில் செயற்கை கோள் நகரம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டதே அது இப்போது எந்த நிலையில் இருக்கிறது?
பதில்:- அதற்காக 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு முடிவடையும் தருவாயில் இருக்கிறது.
கேள்வி:- ரயில்வே வாரியத்தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?
பதில்:- அனைத்து நிலைகளில் தமிழ் இருக்க வேண்டும் என்பது தான் அ.தி.மு.க ஆட்சியின் நிலைப்பாடு அதில் நாங்கள் எப்போதும் பின்வாங்க போவதில்லை அந்த கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.
கேள்வி:- ஓ.பி.ரவீந்திரநாத்குமார் நாம் இந்து என்கிற உணர்வோடு இருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறாரே?
பதில்:- பொதுவாக எதிர்க்கட்சிகள், அவர் முன்னால் பின்னால் பேசியதை எடுத்துக்கொண்டு நடுவில் இருக்கும் பிரச்னைக்குரிய வார்த்தைகளை பெரிதாக்குகிறார்கள். அந்த வகையில்தான் ரவிந்திரநாத் பேசியதையும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். முன்னால் பின்னால் பேசிய பகுதிகளை இணைத்து பார்த்தால் உண்மை புரியும்.
கேள்வி:- இந்து என்று பேசினால்தான் அமைச்சராக முடியும் என்பதற்காக அவர் அப்படி பேசியதாக கூறப்படுகிறதே?
பதில்:- அந்த விமர்சனத்திற்கே போக வேண்டாம். முன்னால் பின்னால் என்ன பேசினார் என்பதை இணைத்து பார்த்தால் சரியாக இருக்கும் அப்போது தான் விஷயம் தெரியும்.
கேள்வி:- முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பியிருக்கின்றனவே?
பதில்:- ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் அடிப்படையில் 217 திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதில் 70 சதவீத திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு திட்ட அறிக்கைகளின் அடிப்படையில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட திட்டங்கள் தீவிர பரிசீலனையில் இருக்கின்றன. முன்னேற்றத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், மிகப்பெரிய திட்டங்கள் குறித்து நாளை (இன்று) சென்னை வர இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரிவாக அறிவிப்பார்.
கேள்வி:- நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் பற்றி?
பதில்:- இரு தொகுதிகளிலும் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க உறுதியாக போட்டியிடும் இரு தொகுதிகளிலும் உறுதியாக மகத்தான வெற்றி பெறும்.
கேள்வி:- நாங்குநேரி தொகுதியில் நாங்கள் போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் கூறி அது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறதே?
பதில்:- அது தி.மு.க - காங்கிரஸ் இடையில் நடக்கும் பனிப்போர், அதுபற்றி கருத்து சொல்வது இந்த நேரத்தில் சரியாக இருக்காது.
கேள்வி:- பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதி வாரிய வீடுகள் வழங்குவதில் சதவீதம் அதிகரிக்கப்படுமா?
பதில்:- ஏற்கனவே பத்திரிகையாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் 100 சதவீதம் முழுமையாக வழங்கப்படுகின்றன. அதில் அதிக சதவீதத்தில் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அது அரசின் தீவிர பரிசீலனையில் இருக்கிறது. அதுபற்றி மகிழ்ச்சியான அறிவிப்பு விரைவில் வரும் மூத்த பத்திரிகையாளர்களுக்கு கூடுதல் சதவீதமாக வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கேள்வி:- நீர் பங்கீடு தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா?
பதில்:- அது பற்றி அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் இதுவரை வரவில்லை.
கேள்வி:- ஒரே நாடு: ஒரே ரேஷன் கார்டு பிரச்னை பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில்:- ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் எந்த குழப்பமும் வராது. நம்முடைய பொது விநியோக திட்டம் அனைவருக்குமான திட்டம். அதில் ஒரு கிராம் அரிசியும் குறையாது. அதில் எந்த மாற்றமும் இருக்காது. இவ்வாறு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன், அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோரும் மாவட்ட செயலாளர்கள் அலெக்சாண்டர், சிறுணியம் பலராமன்,மற்றும் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.,கே.எஸ்.விஜயகுமார், முன்னாள் எம்.பி. டாக்டர் வேணுகோபால், முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு