முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பெண் சிசு கொன்று புதைப்பு?

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மண்ணில் புதைந்த நிலையில் இறந்து கிடந்த பெண் சிசுவின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். சிலை எதிரில் இருந்த டீக்கடை கடந்த சில மாதங்களாக பூட்டிய நிலையில் கிடந்தது. அந்த கடையில் தற்போது மராமத்து பணிகள் நடந்து வந்தது. இதற்காக செங்கல், மணல் ஆகியவை வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலையில் கட்டிடப் பணிக்காக தொழிலாளர்கள் வந்தனர். அவர்கள் அங்கே கொட்டப்ட்டிருந்த மணலை அள்ளியபோது அதிர்ச்சி அடைந்தனர். அந்த மணலுக்குள் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசு தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் இறந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. மணிமாறன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
தகாத முறையில் பிறந்த குழந்தையை யாரேனும் மண்ணுக்குள் புதைத்து சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். அப்பகுதியில் உள்ள கேமராக்களில் ஏதேனும் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் பெண் சிசுவை யாரேனும் கொலை செய்து விட்டு மண்ணில் புதைத்து சென்றார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து