எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : துறை சார்ந்த புதிய திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அமைச்சர்கள் வெளிநாடு சென்றார்கள் என்றும் நான் முதலமைச்சராக பதவி ஏற்றது முதல் இன்று வரை எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின் நினைத்தது நடக்கவில்லை, அந்த எரிச்சல், பொறாமையில் இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேற்று சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அவை வருமாறு:-
கேள்வி:- உங்கள் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்ததா?
பதில்:- தொழில் முதலீட்டாளர்கள், நம்முடைய தமிழகத்தில் புதிய தொழில் துவங்க, எதிர்பார்த்ததைவிட ஆர்வமாக இருக்கின்றார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டிலிருந்து சென்று வெளிநாட்டில் தங்கி தொழில் செய்பவர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள். ஆகவே, அவர்களெல்லாம், தமிழகத்திற்கு வந்து, என்னைச் சந்தித்து, தொழில் துவங்க ஆர்வத்தோடு இருக்கின்றார்கள். நீண்ட நாட்களாக தமிழகத்திலிருந்து எந்தவொரு முதலமைச்சரும் வெளிநாடு செல்லவில்லை என்ற குறைபாடு இருந்தது. அந்தக் குறைபாட்டை இப்பொழுது தீர்த்து வைத்திருக்கின்றோம்.
கேள்வி:- கோட், சூட் அணிந்து இந்தியா திரும்புவீர்கள் என்று எதிர்பார்த்தோம், நீங்கள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் வந்திருக்கின்றீர்களே?
பதில்:- வெளிநாட்டிற்கு நாம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றிருக்கிறோம். அயல் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சந்திக்கும்பொழுது, அவர்கள் உடையில் இருந்தால்தான் அது சரியாக இருக்கும். நம்முடைய விருப்பத்தைத் தெரிவிக்காமல் அவர்களுடைய விருப்பத்தை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.
கேள்வி:- இந்த வெளிநாட்டுப் பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?
பதில்:- இவையெல்லாம் குறுகிய காலத்திலே நடைமுறைக்கு வர இருக்கின்றன. திறமையான தொழிலதிபர்களுடன் தான் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இன்னும் பல முதலீட்டாளர்கள் வர இருக்கிறார்கள்.
கேள்வி:- வெளிநாடு சென்று அதிக அளவில் முதலீடு ஈர்க்கப்பட்டு, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ச்சியாக அமைச்சர்கள், முதலமைச்சர் மீது விமர்சனம் முன் வைத்து வருகிறாரே?
பதில்:- நான் முதலமைச்சராக பதவி ஏற்றது முதல் இன்று வரை எதிர்ப்புக் குரல் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் நினைத்தது நடக்கவில்லை, அந்த எரிச்சல், பொறாமையில் இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார். முதலமைச்சர் மட்டுமல்லாமல், மற்ற அமைச்சர்களும் அவரவர் துறை சார்ந்த புதிய திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார்கள். வனத்துறை அமைச்சர் வண்டலூர் பூங்காவை நவீனப்படுத்துவதற்காக வெளிநாடு பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய அளவிற்கு, பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றை நவீன முறையில் புகுத்தியிருப்பது போன்று, தமிழகத்திலும் புகுத்த வேண்டும். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருக்கின்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். சிறிய நாடாக இருக்கக் கூடிய துபாய் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை பார்க்க வேண்டும். தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி, அனைத்து வளங்களும் இருக்கின்ற நம்முடைய நாட்டிலும் சுற்றுலாவை மேம்படுத்தலாம், இதனால் பொருளாதாரம் மேம்பாடு அடையும், வேலைவாய்ப்புகள் பெருகும். ஆகவே, சுற்றுலாப் பயணிகள் ஒரு நாட்டுக்கு வந்து சென்று, அந்நாட்டிலுள்ள பல்வேறு அம்சங்களைப் பற்றி அவர்கள் நாட்டில் உள்ள தொழில் அதிபர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரிவிப்பார்கள். இது, தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்கான அடித்தளமாக அமையும். துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்பவர்கள் அந்த நாடுகளின் சிறப்புக்களை இங்கு வந்து சொல்வதுபோல், இந்தியாவிற்கு வருபவர்களும் அது போல் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் வெளிநாட்டிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.
கேள்வி:- பபல்லோ நகரில் உள்ள கால்நடை பண்ணைக்கு நேரில் சென்றீர்கள், அந்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில்:- மிகச் சிறப்பாக இருந்தது. ஒரே இடத்தில் 3,000 பசுக்கள் வளர்க்கிறார்கள், ஒரு பசு ஒரு நாளைக்கு சுமார் 70 லிட்டர் பால் கொடுக்கிறது. குறைந்த ஆட்களைக் கொண்டு நவீன முறையில் அதைப் பராமரிக்கிறார்கள். தமிழ்நாட்டில், பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில், அதாவது ஒரு மாவட்டத்தில் 70,000 லிட்டர் முதல் 80,000 லிட்டர் வரை பால் சேகரிக்கிறோம். ஆனால் அங்கு ஒரே இடத்தில் ஒரு பண்ணையில் 1,20,000 லிட்டர் பால் கறக்கிறார்கள். தமிழகத்தின் வேளாண் பெருமக்களின் உபதொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பு. இங்கு இருக்கும் கால்நடைகள் ஒரு நாளைக்கு 15 முதல் 20 லிட்டர் பால் மட்டும்தான் கறக்கிறது, ஆனால், அங்கு இருக்கும் பசு, ஒரு நாளைக்கு 70 லிட்டர் பால் கறக்கிறது. ஆகவே, அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு அளிப்பதன் மூலமாக, அவர்கள் கூடுதல் வருமானம் பெறமுடியும். எனவே, அந்த தொழில்நுட்பத்தை கண்டறியச் சென்றோம். அங்கிருக்கின்ற கால்நடைகளின் ஒவ்வொரு கன்றுக்கும் ஒரு பிளாஸ்டிக் கூண்டு கட்டி, ஷெட் அமைத்து, படிப்படியாக தேவையான தட்பவெப்ப நிலையை உருவாக்கி, தீவனம் கொடுத்து, குழந்தைகளைப் போல் வளர்க்கின்றார்கள். இவற்றையெல்லாம் நேரடியாகச் சென்று அறிந்து அதனை தமிழ்நாட்டிலும் பயன்படுத்துகின்ற பொழுது பயனுள்ளதாக இருக்கும்.
கேள்வி:- 40 ஆண்டுகளுக்குப் பின் ஒரு தமிழக முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள், அங்கு வாழக்கூடிய மக்கள் எந்த அளவிற்கு உங்களை வரவேற்றார்கள்?
பதில்:- அனைவரும் எங்களை ஆர்வத்துடன் வரவேற்றார்கள். ஏறக்குறைய இரண்டாயிரம் மைலுக்கு அப்பாலிருந்து வந்துகூட நியூயார்க்கில் வரவேற்றார்கள். அங்கு உழைப்பதற்கென்றே தமிழர்கள் பிறந்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன், அந்த அளவிற்கு உழைக்கிறார்கள், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், பல தொழிலதிபர்கள் என்னை சந்திக்கின்றபொழுது, தமிழகத்தில் ஐ.டி. பார்க் அமைப்பதற்கு நாங்கள் முன்வருகிறோம் என்று விருப்பம் தெரிவித்திருக்கின்றார்கள். அமெரிக்காவின் IT field-ல் ஏறக்குறைய 35 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.