எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சேலம் மாவட்டம் தலைவாசலில் அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்கா செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
வெளிநாடுகளில் உள்ள நகர உட்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திடவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 28.8.2019 முதல் 10.9.2019 வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டேன். அதன்படி, 28.8.2019 அன்று இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் சென்று, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடுகளைக் கண்டறிந்து, அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்திட, சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்துடனும், தமிழ்நாட்டில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை நிறுவிட கிங்ஸ் மருத்துவமனையுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. இங்கிலாந்து நாட்டில் சபோல்க் நகரத்தில் என்ஜென் நிறுவனம் , மரபு சாரா எரிசக்தியான சூரிய எரிசக்தி, காற்றாலை எரிசக்தி ஆகியவற்றை மின்கட்டமைப்புடன் இணைக்கும் வழிமுறைகளை நான் பார்வையிட்டேன். மேலும், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துதல், அந்நோய்களை கையாளும் வழிமுறைகள் தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை கையெழுத்தானது. அத்துடன், லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகளை பார்வையிட்டு, அந்நிறுவனம் பின்பற்றும் நுட்பமான வழிமுறைகளை தமிழ்நாட்டிலுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊர்திகளில் நடைமுறைப்படுத்த உள்ளோம். 29.8.2019 அன்று லண்டனில் உள்ள இங்கிலாந்து பாராளுமன்ற கூட்ட அரங்கில், இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழ்நாட்டில் முதலீடு செய்யவுள்ள சாத்தியக்கூறுகளை பற்றி எடுத்துக்கூறி, அதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நன்மை பற்றியும் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்ய கோரிக்கை விடுத்தேன். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை தொடர்ந்து, 2.9.2019 அன்று அமெரிக்க நாட்டின் பபல்லோ கால்நடை பண்ணைக்கு சென்று, அங்கு அதிக பால் தரக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தி உடைய கலப்பின மாடுகளை உருவாக்கும் தொழில்நுட்பம், பால் மற்றும் இதர பொருட்களை பதப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, இந்தப் புதிய தொழில்நுட்பங்களை, சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவில் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை கேட்டறிந்தேன். மேலும், 3.9.2019 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ரூபாய் 2,780 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம், தமிழ்நாட்டில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும், Haldia Petrochemicals நிறுவனம், Naphtha Cracker Unit-உடன் கூடிய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க என்னை சந்தித்து ஆலோசனை செய்தனர். அதனைத் தொடர்ந்து, நியூயார்க் நகரில், உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்கவும், “யாதும் ஊரே” என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்தேன். சான் ஹீசே நகரில் 4.9.2019 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 6,500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோருக்கு தேவையான உதவிகள் அளிக்க அமெரிக்க தொழில் முனைவோர் அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள Digital Accelerator திட்டத்தை துவக்கி வைத்தேன்.
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு தொழில் முனைவோருக்கு அவர்கள் தொடங்கும் புதுத்தொழிலுக்கு தேவையான நிதியில் 10 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும். இதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அத்துடன் சான் ஹீசே நகரில் “யாதும் ஊரே” திட்டத்தையும் துவக்கி வைத்தேன். 5.9.2019 அன்று அமெரிக்கா நாட்டின், சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா நிறுவனத்திற்கு சென்று, சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கின்ற வகையில் அந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இயங்கிடும் வாகனங்கள், பாட்டரிகள், எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆகிய பணிகளை பார்வையிட்டேன். அப்போது, இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க டெஸ்லா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தேன். மேலும், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதரால் உருவாக்கப்பட்டுள்ள ப்ளூம் எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டு, மாசில்லா எரிசக்தியை எளிய முறையில் தயாரிப்பது குறித்தும், அத்தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்தும், அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தேன். 6.9.2019 அன்று லாஸ் ஏஞ்சலஸ், Anaheim நகர மேயர் சித்து, என்னை வரவேற்று அந்நகரில் அமைந்துள்ள கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீராக்கும் மையத்தை காண்பித்தார். கழிவுநீர் சுத்திகரிப்பில், சிறந்த தொழில்நுட்பத்தை அங்கு பயன்படுத்தி வருகிறார்கள். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுசுழற்சி செய்து, கழிப்பறை, தோட்டங்கள், மரங்களுக்கு நீர் பாசனம் செய்யவும், ஏரிகளில் தேக்கி நிலத்தடி நீரை செரிவூட்டி, அந்த நிலத்தடி நீரை குடிநீருக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் கண்டறிந்தேன். இதுபோன்று, கழிவு நீரை சுத்திகரித்து, மறுசுழற்சி செய்தால், சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில் நன்னீர் தேவை குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும் என்பதால், சோதனை அடிப்படையில் ஒரு மாதிரி சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க, Anaheim நகராட்சி மேயர் அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளார். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் கழிவு நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் ஒரு மாதிரி அலகை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, 9.9.2019 அன்று துபாய் நாட்டிற்கு சென்று, ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் “Business Leaders Forum” என்ற அமைப்பும், இந்திய துணைத் தூதரகமும் இணைந்து நடத்திய துபாய் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். இந்தக் கூட்டத்தில், 3,750 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் 10,800-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதனைத் தொடர்ந்து, துபாயில் உள்ள தொழில் முனைவோர்களோடு நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் தொடங்கிட அழைப்பு விடுத்தேன். இந்த வெளிநாட்டு பயணத்தின் மூலமாக நான் நேரடியாக கண்டறிந்த பல திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும், கிராமங்கள் மற்றும் நகரங்களின் கட்டமைப்புகளையும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்ய, இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தச் சுற்றுப் பயணம் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய உதவிகரமாக இருந்த வெளிநாடு வாழ் தமிழ் சொந்தங்கள், பிற தொழில் அமைப்புகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வெளிநாடு வாழ் தன்னார்வலர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, மொத்தம் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் மூலமாக 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தொழில் நிறுவனங்களுக்கு தொழில்கள் துவங்குவதற்கு உண்டான அனைத்து உதவிகளையும் எனது அரசு விரைந்து செய்து கொடுக்கும். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் சுற்றுலாவிற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அந்த வழியில் அம்மாவின் அரசும், சுற்றுலாவிற்கு மேலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்நாட்டில் சுற்றுலாவிற்கு உகந்த சிறந்த மையங்களை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்கும்.மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருவதையும் கண்டறிந்தேன். வெளிநாட்டு முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்க தேவையான அனைத்து உதவிகளையும் முன் நின்று செய்யும் அமைப்புகளையும், ஒற்றை சாளர முறையையும் மேலும் வலுப்படுத்தி, அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டின் தொழில் வளத்தை பெருக்கவும், தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், புதிய உத்வேகத்துடன் அம்மா அரசு செயல்பட, இந்த வெளிநாட்டு பயணம் பேருதவியாக இருந்தது. மேலும் இந்தப்பயணம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உதவியதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே தமிழ்நாட்டின் மீது ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த அறிவுசார் புரிதலுக்கு இந்தப்பயணம் ஒரு பேருதவியாக அமைந்த ஒரு வெற்றிகரமான பயணமாக இருந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.