முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதற்கு எதிராகவும் ஜாமீன் கோரியும் டெல்லி ஐகோர்ட்டி்ல ப.சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 19-ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார். இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் சார்பில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இதே போல், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக இம்மாத இறுதியில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ஐ.என்.எக்ஸ். வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையும் முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து