முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி  : ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். போலீஸ் தரப்பில் 2 பேர் காயமடைந்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தளபதி ஆசிப் என்பது தெரியவந்துள்ளது. சோப்பூர் பகுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையின்போது, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து