முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாவின் 111-வது பிறந்தநாள் கொண்டாட்டம் - 15-ம் தேதி இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மாலையணிவித்து மரியாதை

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 111-வது பிறந்த நாளான 15-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதல்வருமான . எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்களும், எம்.பிக்களும் எம்.எல்.ஏ.க்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும்,  அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து