முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தின் ஜாமீன் மனு குறித்து சி.பி.ஐ. பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக சி.பி.ஐ. பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு தற்போது, நீதிமன்ற காவலில் திகார் சிலையில் உள்ளார். இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலுக்கு எதிராகவும், ஜாமீன் வழங்க கோரியும் இரு வெவ்வேறு மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் நீதிபதி சுரேஷ்குமார் கைட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக சி.பி.ஐ. பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும், ஜாமீன் மனு தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், ப.சிதம்பரத்தின் ஜாமீ்ன் மனு தொடர்பான விசாரணையை 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து