எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகெங்கிலும்உள்ள முதலீட்டாளர்களையும், இந்திய முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் திறனில் முன்னணி மாநிலமாக தொடர்ந்து விளங்க காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சியால் குறை கூறலாமா என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
ஜனவரி 2019-ல் வெற்றிகரமாக நிறைவுற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டினைத் தொடர்ந்து, ஒன்பதே மாதங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திருக்கரங்களால் 22 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 4 நிறுவனங்களின் முழுமையான வணிக உற்பத்தியும் துவங்கப்பட்டது. ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய மின்சார வாகனம் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. தங்கள் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டையே இருளில் மூழ்கடித்து, தொழில் நிறுவனங்களை சொல்லொணாத் துயரில் ஆழ்த்தியவர்கள் நீங்கள். தற்போது தமிழ்நாட்டின் தொழில் துறையின் வெற்றிப் பயணத்தை பொறுக்க முடியாமல் வெற்றுக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2011-ம் ஆண்டு மே மாதம் வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வந்த மொத்த அந்நிய நேரடி முதலீடு 25,977 கோடி ரூபாய் மட்டுமே. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,200 கோடி ரூபாய். 2011-ம் ஆண்டு ஜூன் முதல் 2019 ஜூன் வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வந்துள்ள மொத்த அந்நிய நேரடி முதலீடு 1.47 லட்சம் கோடி ரூபாய். சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 18,350 கோடி ரூபாய் ஆகும்.
தி.மு.க. ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடுகையில், அ.தி.மு.க. ஆட்சி செய்து வரும் ஒவ்வொரு வருடத்திலும் மூன்றை மடங்கு அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு 2015--ல் பல்வேறு துறைகள் சார்பாக கையொப்பம் இடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் கையெழுத்திடப்பட்ட 10,073 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட முதலீடு 2,42,160 கோடி ரூபாயாகும். கடந்த 18 ஆண்டுகளில் வரப்பெற்ற அந்நிய நேரடி முதலீடான ரூபாய் 1.8 லட்சம் கோடியில் சுமார் 47 சதவீதம். அதாவது 84,269 கோடி ரூபாய், 2015-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறகு தான் வந்துள்ளது.
செப்டம்பர் 2015 முதல் மார்ச் 2019 வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உலகெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துரைத்து, முதலீடு செய்ய அழைப்பு விடுத்ததே இதற்கு காரணம். முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லவில்லை என்பதைக் கூட ஒரு சாதனையாக கூறிக் கொண்டு இருந்தால் போட்டிகள் நிறைந்த உலகில் எந்த முதலீடும் வராது. சுழன்று வேலை செய்தால் தான் முதலீடுகள் வரும் என்பதற்கு இதுவே சான்று. முந்தைய 15 ஆண்டுகளில் வரப்பெற்ற மொத்த அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஈடாக மாநாடு நடைபெற்ற நான்கே ஆண்டுகளில் தமிழ்நாடு புதிய அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது என்பதை விட உலக முதலீட்டாளர் மாநாட்டின் வெற்றிக்கு வேறு சான்று என்ன வேண்டும்?
உலக முதலீட்டாளர் மாநாடு 2019 உலக முதலீட்டாளர் மாநாடு 2019-ல் பல்வேறு துறைகளின் சார்பாக கையொப்பம் இடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் கையொப்பம் இடப்பட்ட 12,360 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட முதலீடு ரூபாய் 3,00,431கோடியாகும். இதில் 221 நிறுவனங்கள் பணிகளை துவக்கி, பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. இது மொத்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கையில் 73 சதவீதம் ஆகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் கையொப்பம் இடப்பட்ட 2,783 தொழில் திட்டங்கள், பணிகளை துவக்கி பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. 22 திட்டங்களுக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்களது வணிக உற்பத்தியை துவக்கி விட்டன. இவை தவிர நிறுவன விரிவாக்கத்தின் முதல் பகுதி செயலாக்கத்திற்கு வந்து, அதன் மூலம் சென்னையில் தயாரித்த மின்சாரக் கார் சமீபத்தில் முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், பெருந்தொழில் துறை சார்பில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் நிறுவனங்கள் விரைவில் முழு வணிகஉற்பத்தியைத் துவங்க தயார் நிலையில் உள்ளன.
பல்வேறு நிறுவனங்கள் தமது முதலீடுகளை தமிழ் நாட்டில் மேற்கொண்டுள்ளன. இதில் குறிப்பாக, ரூபாய் 4,000 கோடி முதலீடு செய்துள்ள நிறுவனம் அனைத்து கட்டுமான பணிகளையும் ஒரே ஆண்டில் நிறைவு செய்து, வரும் அக்டோபர் மாதம் வணிக உற்பத்தியை துவக்கவுள்ளது. அம்மாவின் அரசு அளித்த தொடர் வழிகாட்டுதல்களே, இவ்வளவு விரைவான செயல்பாட்டிற்கு காரணம் என்றால் அது மிகையாகாது. மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில் பொருளாதார தேக்க நிலையின்தாக்கம் இருக்கும் போது கூட இந்திய அளவில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுமுறைப் பயணம் பல்வேறு தொழில் துறையினர் வழங்கிய ஆலோசனையை ஏற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியநாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணம் மேற்கொண்டனர். பெரும் வெற்றி பெற்ற இந்தப் பயணம், தமிழ்நாட்டின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த அறிவுசார் புரிதலுக்கு இந்தப் பயணம் ஒரு பேருதவியாக அமைந்தது. இது தவிர மொத்தம் 41 நிறுவனங்களின் ரூ. 8,835 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்த்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பும் இப்பயணத்தால் கிடைத்தது.
லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை, இங்கிலாந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடுகளைக் கண்டறிந்து, அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்திட, சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்துடனும், தமிழ்நாட்டில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை நிறுவிட கிங்ஸ் மருத்துவமனையுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. முதல்முறையாக உலக தமிழர்களின் முதலீடுகளை, தமிழ்நாட்டிற்கு ஈர்க்கவும், தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு அவர்களின் ஆலோசனைகளை பெறவும், யாதும் ஊரே என்ற புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியூ யார்க் நகரில் துவக்கி வைத்தார். இது உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மத்திய அரசின் புள்ளியியல் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள தொழிற்சாலைகளுக்கான ஆண்டு ஆய்வு அறிக்கையின்படி, 2015-16 மற்றும் 2016-17 தொழிற்சாலை வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. டெல்லி மாநிலத்தில் உள்ள மொத்த தொழிற்சாலை வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கைக்கு ஈடாக ஒரே ஆண்டில் மட்டும் தமிழ்நாடு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில்உள்ள மொத்த தொழிற்சாலை வேலைவாய்ப்புகளை விட இரு மடங்கு வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன. மேலும், ஆந்திர மாநிலம் ஓராண்டில் கூடுதலாக அளித்த நேரடி தொழிற்சாலை வேலைவாய்ப்பு 38,957, தெலுங்கானா மாநிலம் ஓராண்டில் கூடுதலாக அளித்த வேலைவாய்ப்பு 28,608. தமிழ்நாடு அரசு, அதே காலத்தில் 73,328 புதிய, நேரடி,தொழிற்சாலை வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது தவிர, தொழிற்சாலைகளின் நிர்வாக பணிகள், மறைமுக வேலைவாய்ப்புகள், சேவைத் துறை உள்ளிட்ட பிற துறை வேலைவாய்ப்புகள் என பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு அரசுஉருவாக்கியுள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாடு -2015-ல் வரப்பெற்ற முதலீடுகள் போக, அதே காலத்தில், பிற தொழில் திட்டங்கள் மூலம், மேலும் 14,153.62 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என விவரம் அளிக்கப்பட்டது. இந்த தொகையை, உலக முதலீட்டாளர் மாநாடு 2015-ன் மூலம் இதுநாள் வரை வரப்பெற்ற மொத்த முதலீடே இதுதான் என்பது போல பொய்யாக திரித்துக் கூறுவது தான் பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவருக்கு அழகா? பல துறைகளிலும் முன்னணி இடத்தில் இருக்கிறோமே என மகிழ்ந்து நின்று விடாமல், ஆசியாவின் மிகச் சிறந்த முதலீட்டு மையமாக தமிழ்நாடு திகழ்ந்திட வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவினை நனவாக்க நாளும் செயல்படுவதே அரசின் நோக்கம்.
மற்ற மாநில முதல்வர்கள் , முதலீடுகளை பெறுவதற்கு வெளிநாடு செல்கிறார்கள். அந்த மாநில எதிர்கட்சி தலைவர் உள்பட அனைவரும் அதை வரவேற்று அரசுடன் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் எந்த அடிப்படையும் இல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு நல்ல பெயர் வரக் கூடாது என எதிர்கட்சி தலைவர், .மு.க.ஸ்டாலின் அவதூறு பிரசாரம் செய்து வருகிறார். சிலரின் வெற்றுக்கூச்சல்களைப் புறந்தள்ளி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, இந்தியாவிலும் உலகெங்கும் தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துக்கூறி தமிழ்நாட்டில் தொழில் துவங்க அழைப்பு விடுக்கும் பணிகளையும், தமிழ் நாட்டின் தொடர் வளர்ச்சியை நோக்கிய வெற்றிப் பயணத்தையும், பாரெங்கும் உள்ள தமிழ் மக்களின் நல்லாதரவோடு, தொடர்ந்து மேற்கொள்ளும் என உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.