முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

வேலூர் : நளினிக்கு வழங்கப்பட்டிருந்த பரோல் நிறைவு பெற்றதையடுத்து நேற்று மாலை மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதற்கிடையில் தனது மகள் திருமணத்திற்க்காக பரோல் கேட்டு இருந்தார். இதற்காக நளினி 6 மாதம் பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது.

இந்த நிலையில் நளினி தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 51 நாட்கள் பரோலில் வந்து, சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

வீட்டிற்கு வந்த நிலையில் அவர் மேலும் ஒருமாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்பேரில் அவருக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது 51 நாள் பரோல் காலம் முடிந்ததால் நளினி நேற்று மாலை மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப் பட்டார். மொத்தம் 7 வார கால பரோல் நிறைவடைந்ததை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் நளினி மீண்டும் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து