முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

22-வது முறையாக உலக பில்லியர்ட்ஸ் பட்டத்தை வென்றார் பங்கஜ் அத்வானி

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

மன்டலை : மியான்மரில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் பங்கஜ் அத்வானி 6-2 என்ற கணக்கில் டிவே ஓவை சாய்த்து 22-வது முறையாக பட்டத்தை சொந்தமாக்கினார்.

மியான்மரில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் பங்கஜ் அத்வானி, உள்நாட்டு வீரர் நா டிவே ஓவை எதிர்கொண்டார். இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பங்கஜ் அத்வானி 6-2 என்ற கணக்கில் டிவே ஓவை சாய்த்து 22-வது முறையாக பட்டத்தை சொந்தமாக்கினார்.

150 புள்ளி வரை கொண்ட குறுகிய வடிவிலான இந்த பில்லியர்ட்சில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அவர் 5 முறை பட்டத்தை ருசித்து இருக்கிறார். 34 வயதான அத்வானி பெங்களூரைச் சேர்ந்தவர் ஆவார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து