முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசத் தந்தை மோடி என்று கூறி சர்ச்சையில் சிக்கிய பட்னாவிஸ் மனைவி

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பிரதமர் மோடிக்கு தெரிவித்த வாழ்த்து செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்தன. இந்த நிலையில் மராட்டிய முதல்வர்  தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமருக்கு தெரிவித்து இருந்த வாழ்த்து செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதில் அவர், பிறந்தநாள் கொண்டாடும் தேசத் தந்தை நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பிரதமர் நாட்டின் நன்மைக்காக இடைவிடாமல் பணியாற்றுகிறார் என கூறியிருந்தார்.

மகாத்மா காந்தி தேசத் தந்தை என நாட்டு மக்களால் அழைக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடியை அம்ருதா தேசத் தந்தை என குறிப்பிட்டதை ஏராளமானோர் கண்டித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து