முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாரதா சிட்பண்ட் வழக்கில் போலீஸ் அதிகாரியை கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

சாரதா சிட்பண்ட் முறைகேடு  வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, ராஜீவ் குமாரைக் கைது செய்யும் முயற்சியில், அதற்கான சட்ட விஷயங்களை சி.பி.ஐ. ஆய்வு செய்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் மக்களிடம் இரட்டிப்பு வட்டி தருவதாக கூறி ரூ. 2500 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க அப்போது கொல்கத்தா போலீஸ் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை நியமித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. ஆனால், விசாரணை முறையாக நடக்கவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு சி.பி.ஐ. அமைப்புக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தற்போது மேற்கு வங்கத்தின் சி.ஐ.டி. கூடுதல் இயக்குநராக ராஜீவ் குமார் இருந்து வருகிறார். இந்த வழக்கை விசாரித்த வந்த போது ஏராளமான ஆவணங்களை அழித்து விட்டதாகவும், ஆவணங்களை முறையாக ஒப்படைக்கவில்லை என்றும் சி.பி.ஐ. குற்றம் சாட்டி ராஜீவ் குமாரை கைது செய்ய முயன்றது.

ஆனால், சுப்ரீம் கோர்ட் மற்றும் கொல்கத்தா ஐகோர்ட்டில் இருந்து கைது செய்ய தடை ஆணை பெற்று ராஜீவ் குமார் தப்பி வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ராஜீவ் குமாரின் மனுவை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட் அவரை கைது செய்ய தடையில்லை என்று அறிவித்தது. அதன்பின் போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி சி.பி.ஐ. அதிகாரிகள் மூன்று முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தலைமைச் செயலகத்தில் சென்று தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளருக்கு ராஜீவ் குமார் குறித்த நோட்டீஸ் அளித்த போதிலும் அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. இதனால், போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரை கண்டுபடிக்க தனிப்படையை சி.பி.ஐ. அமைத்து தேடி வருகிறது. இந்த சூழலில் (நேற்று)வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகக் கோரி சி.பி.ஐ. போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஆஜராகவில்லை.

இதற்கிடையே ராஜீவ் குமாரின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள், செல்பேசி எண்களை மாநில போலீல் டி.ஜி.பி.யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுள்ளார்கள். விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வரும் போலீஸ் அதிகாரியை கைது செய்ய வாரண்ட் கேட்டு அலிப்போர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்தது. ஆனால், மனுவை விசாரித்த நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் ராஜீவ் குமாரை கைது செய்யத் தடையில்லை என்று அறிவித்த நிலையில் அவருக்கு வாரண்ட் ஏதும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தது. இதனால், போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரை கைது செய்யும் முயற்சியில் சி.பி.ஐ. தீவிரமாக இறங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து