எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம்,கள்ளிக்குடி மற்றும் பேரையூர் தாலுகாக்களில் சிறப்புடன் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்புமக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அம்மா திட்டத்தின் மூலம் பயனாளிகள் 971 பேருக்கு ரூ.2 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம்,கள்ளிக்குடி மற்றும் பேரையூர் தாலுகாக்களில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நேற்று வெகு சிறப்புடன் நடைபெற்றது.அதன்படி திருமங்கலம் தாலுகாவில் அ.கொக்குளம் கிராமம்,பேரையூர் தாலுகாவில் பேரையூர் பேரூர்,கள்ளிக்குடி தாலுகா குராயூர் கிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்களுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் டி.எஸ்.ராஜசேகர் தலைமை வகித்தார்.மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ்,திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் வட்டாட்சியர் தனலட்சுமி,கள்ளிக்குடி வட்டாட்சியர் மூர்த்தி,பேரையூர் வட்டாட்சியர் ஆனந்தி ஆகியோர் வரவேற்றனர்.
ஏழை,எளியோர் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அம்மா திட்டத்தின் கீழ் திருமங்கலம்,கள்ளிக்குடி மற்றும் பேரையூர் வட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் 971 பேருக்கு முதியோர் உதவித் தொகை,வீட்டுமனை பட்டா,பட்டா மாறுதல் உட்பிரிவு,ஆதரவற்ற விதவைச் சான்று,மினிகிட் துவரை,முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை உள்ளிட்ட ரூ.2கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.பின்னர் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பெற்றுக் கொண்டு அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக அ.கொக்குளம்,காரைக்கேணி, குராயூர் ஆகிய கிராமங்களுக்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பூரணகும்ப மரியாதை செய்தும்,வெற்றி குலவையுடன் ஆரத்தி எடுத்தும் அன்புடன் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்: தமிழக முதலiமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.இதற்காக தமிழகம் முழுவதிலும் அலுவலர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இதில் 5லட்சம் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதே போல் 5ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சேபணை இல்லாத ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இருந்தால் அவர்களுக்கு பட்டா வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும் ஆட்சேபணை உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு மாற்று இடங்கள் வழங்கிடவும்,இடம் இல்லையென்றால் தனியார் இடத்தினை கொள்முதல் செய்து அவர்களுக்கு இடம் வழங்கப்படவுள்ளது.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.தென்மேற்கு பருவமழைகாலம் இன்னும் முடியவில்லை.காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் போது மழை பொழிவு அதிகமாக இருக்கும்.தற்போது பெய்கிற மழை தற்காலிகமாகத்தான் இருக்கும்.
தென்மேற்கு பருவமழை என்பது ஆந்திரா,கர்நாடகா,கேரளா ஆகிய பகுதிகளில் தொடர்கனமழையாக இருக்கும்.வடகிழக்கு பருவமழையின் போது தான் நமக்கு தாழ்வு மண்டலம் உருவாகி அது புயலாக,சூறாவளியாக உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது.ஆதலால் அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் மாதங்களில் ஏற்படும் மழைப்பொழிவு 48சதவீதம் நமக்கு குடிநீருக்காகவும்,விவசாயத்திற்காகவும் பயன்படுகிறது. அதற்காகத்தான் ரூ.700கோடிக்கு மேல் குடிமராமத்து திட்டத்திற்காக முதலமைச்சர் நிதி வழங்கியுள்ளார்.அதே போல் ஊராட்சி உள்ளாட்சி மற்றும் நகராட்சிளில் உள்ள கண்மாய்களை தூர்வாருவதற்கு ரூ.500கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.288கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக பொதுப்பணித்துறையில் எங்கெல்லாம் பைப் கல்வெர்ட் உள்ளதோ அதை பாக்ஸ் கல்வெர்ட் ஆக மாற்றிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது.அதன பேரில் 32வருவாய் மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.
கடலூர் மாவட்டத்தை பொறுத்த மட்டில் 121 நிவாரண பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.கடலோர மாவட்டங்கள் இல்லாத பகுதிகளிலும் பள்ளி,திருமண மண்டபம் ஆகியவை அடையாளம் காணப்பட்டு வருகிறது.மழை காலங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான தங்கும் இடம்,உணவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் செய்து தரப்படும்.தமிழகம் முழுவதும் 4199 பாதிக்கப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அதை வரைமுறைப்படுத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.கடலோர மாவட்டங்களில் முதலமைச்சரின் உத்தரவைப் பெற்று நேரடி ஆய்வுகள் செய்து வருகிறோம். வருகிற வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்திடும் மழைநீரை சேமித்து வைக்கும் அளவிற்கு அனைத்து ஆயத்தப் பணிகளையும் தயார் நிலையில் வைத்துளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த முகாம்களில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ஜெயராமன்,வேலுச்சாமி,முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன்,நிலவள வங்கி தலைவர் கபிகாசிமாயன்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,போத்திராஜா,மாவட்ட துணைச்செயலாளர் பஞ்சம்மாள்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,நகர அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைச் சேர்மன் சதீஸ்சண்முகம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,முன்னாள் யூனியன் துணை சேர்மன்பாவடியான்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி,தர்மர்,பாஸ்கரன்,ராமகிருஷ்ணன், செல்வமணி செல்லச்சாமி,கல்யாணி,கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் மகாலிங்கம்,முன்னாள் துணை சேர்மன் கண்ணன்,அவை தலைவர் வேல்பாண்டி,அம்மா பேரவை வேல்ராமகிருஷ்ணன், சின்னஇருளப்பன்,முருகன்,அழகர்,அன்னமுத்து,வில்லூர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அன்னக்கொடி,சுகுமார்,சாமிநாதன்,கட்டாரி வேல்முருகன்,சிவன்காளை,காமதேவன்,சிங்கராஜபாண்டியன்,கொடிவைரன்,முத்து,கட்சி வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.