முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் பொருளாதாரம் 8.24 சதவீதத்திற்கு வளர்ச்சி: டெல்லி பொருளாதார நிபுணர் பானு மூர்த்தி பாராட்டு

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

உலகமெங்கும் பொருளாதார நிலை ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் தமிழகத்தின் பொருளாதாரம் 8.24 சதவீதத்திற்கு வளர்ச்சியடைந்திருப்பதாக பொருளாதார நிபுணர் பானுமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குறைவான வடகிழக்கு பருவமழை மற்றும் கஜா புயலால் தமிழ்நாட்டின் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், 2018-19ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதமானது 8.17 சதவீதமாக பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) மாநிலத்தின் இயல்பான மழை அளவான 44 செ.மீட்டருக்கு, 24 சதவிகிதம் குறைவாக அதாவது 33 செ.மீட்டர் பெய்துள்ளது. பொதுவாக, மாநிலத்தின் ஆண்டு மழையளவில் கிட்டத்தட்ட 50 சதவிகித மழையானது, இப்பருவத்தில் கிடைக்கும். 2018 நவம்பர் மாதத்தில் நிகழ்ந்த புயலினால் மாநிலத்தின் மத்திய பகுதிகளில் லட்சக் கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால், கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. சென்ற ஆண்டில் சாதகமான பருவ நிலை நிலவியதால் மேட்டூர் அணையில் போதுமான அளவு நீர் நிரம்பி, ஜூலை மாதத்தில் அணையின் முழுக் கொள்ளளவினை எட்டியது. தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக, பொருளாதாரத்தின் இரண்டாம் மற்றும் சேவைப் பிரிவுகளை விட முதன்மைப் பிரிவு மிக நன்றாக பங்காற்றியுள்ளது. அதாவது கடந்த ஆண்டில் ஏறக்குறைய இரு இலக்கு வளர்ச்சியாக 9.9 சதவிகிதம் வரை வளர்ச்சி விகிதம் எட்டப்பட்டுள்ளது. மாநிலத்தின் வேளாண்மைத் துறையின் 2019-20 ஆம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ள சென்ற ஆண்டில் மாநிலத்தில் உணவு தானிய உற்பத்தியானது 104.02 லட்சம் மெட்ரிக் டன்னை அடைந்துள்ளது.

இரண்டாம் மற்றும் சேவைப் பிரிவுகளில் வளர்ச்சி விகிதம் முறையே 6.59 சதவிகிதம் மற்றும் 8.24 சதவிகிதம் அடைந்துள்ளது. மாநிலத்தின் சாதனையை பாராட்டி, டெல்லியில் உள்ள பொது நிதி மற்றும் கொள்கை தேசிய நிறுவனத்தின் பேராசிரியர் என்.ஆர்.பானுமூர்த்தி, தேசிய அளவில் 2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு மற்றும் 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி போன்ற பொருளாதார நடவடிக்கைகள் தமிழ்நாட்டை பெரிதும் பாதிக்காத வண்ணம் மாநிலத்தின் பொருளாதாரமும், முதலீடுகளும், சாதகமான சூழல் நிலவுகிறது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சில்லரை வணிகம் நடத்தி வரும் கோவை சத்யன் கூறுகையில், அனைத்து பிரிவுகளின் வளர்ச்சியினால், மாநிலத்தின் பொருளாதார நிலைமையானது சரியான சமநிலையினை நெருங்கி வருகிறது என தெரிவித்துள்ளார். இதர மாநிலங்களில் வளர்ச்சியானது பிரிவுகளுக்கிடையே அதிக வேறுபாட்டுடன் சமநிலையற்ற சூழ்நிலை நிலவுகிறது. அதிக அளவிலான தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு முதல்வர் எட்பபாடி பழனிசாமி உடனடியாக ஒப்புதல் வழங்கியுள்ளதை சத்யன் வெகுவாக பாராட்டியுள்ளார். தற்காலத்தில் நிலவும் மந்தமான பொருளாதார சூழ்நிலையிலும் தமிழ்நாடு அதிக அளவு முன்னேற்றத்தினை அடையும் என்பதை உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து