முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட் - 601 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர்

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புனே : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் விராட் கோலி இரட்டை சதமடித்து அசத்த, இந்தியா 5 விக்கெட்டுக்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா இம்முறை 14 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து இறங்கிய புஜாரா அகர்வாலுக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக ஆடினர். இந்த ஜோடி 138 ரன்கள் சேர்த்தது.

அரை சதமடித்த புஜாரா 58 ரன்னில் ஆட்டமிழந்தார். இரண்டாவது டெஸ்டில் பொறுப்புடன் ஆடிய மயங்க் அகர்வால் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். அவர் 108 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும், அஜிங்கியா ரகானேவும் பொறுமையாக ஆடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். கேப்டன் விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 85.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை எடுத்துள்ளது. கோலி 63 ரன்னுடனும், ரகானே 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ரகானே அரை சதமடித்தார். அவர் 59ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் தூணாக நின்ற கேப்டன் கோலி பொறுப்புடன் ஆடி இரட்டை சதமடித்து அசத்தினார். அவருக்கு ரவீந்திர ஜடேஜா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 91 ரன்னில் அவுட்டானார். இருவரும் இணைந்து 225 ரன்கள் குவித்தனர். இதையடுத்து, இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்துள்ள நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகராஜ், முத்துசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து