எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இடைதேர்தல் வருவதற்கு காங்கிரஸ் கட்சியின் சுயநலமே காரணம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இடைதேர்தல் ஏன்?
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அதன் பிறகு இடைதேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொகுதியில் வருகிற 21-ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக அமைச்சர்கள், அ.தி.மு.க. பிரமுகர்கள் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்து வந்தார்கள். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
முதல்வர் பிரச்சாரம்
நேற்று அவர் நாங்குநேரி தொகுதிக்கு வந்தார். அப்போது அவரை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பிறகு ரெட்டியார்பட்டி பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
நாங்குநேரி தொகுதியில் இடைதேர்தல் வரக்காரணமே காங்கிரஸ் கட்சியின் சுயநலம்தான். இது ஒரு திணிக்கப்பட்ட தேர்தல். நமது வேட்பாளர் நாராயணன் இந்த பகுதியை சேர்ந்தவர். அவர் மக்களின் குறைகளை கேட்பார். ஏற்கனவே இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் பெரிய பதவி கிடைத்ததும் ஓடிப் போய் விட்டார். அவர் இந்த தொகுதி மக்களை மறந்து விட்டார். இப்போது இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் இப்படித்தான். இங்கு அலைகடலென திரண்டிருக்கிறீர்கள். ஏதோ வெற்றி விழா நடப்பது போல் கூடியிருக்கிறீர்கள். நீங்கள் யாரை தேர்ந்தெடுத்தால் நல்லது என்று முடிவு செய்து விட்டு வாக்களிக்க வேண்டும். ரெட்டியார்பட்டி நாராயணன் இங்கே பிறந்து வளர்ந்தவர். அவரை நீங்கள் எளிதில் அணுகலாம். அவர் உங்களுக்கு நன்மை செய்யக் கூடியவர். ஆகவே உங்களுக்கு தேவை நன்மை செய்யும் வேட்பாளரா? அல்லது வெளியூரில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளரா? காங்கிரஸ் வேட்பாளர் ஒரு கோடீஸ்வரர். அவரை நீங்கள் சுலபமாக அணுக முடியாது. எனவே நீங்கள் எளிதில் அணுக கூடிய அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாய்ப்பு தாருங்கள்.
ஸ்டாலின் மீது தாக்கு
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு இடைதேர்தல் வரும் போதுதான் திண்ணை பற்றி ஞாபகமே வரும். இடைதேர்தல் நடக்கும் போது திண்ணையில் வந்து உட்கார்ந்து பிரச்சாரம் செய்வார். பெட்ஷீட் போட்டு உட்கார்ந்து மக்களை ஏமாற்றுவார். உங்களுக்கு என்ன பிரச்சினை என்றெல்லாம் கேட்டு மனு வாங்குவார். இவர் மனு வாங்கி என்ன செய்யப் போகிறார். அந்த மனுவை யாரிடம் தருவார். அந்த மனுக்கள் எல்லாம் குப்பை தொட்டிக்குத்தான் போகும். ஆளும் கட்சி பிரதிநிதியிடம் மனுக்கள் கொடுத்தால் அந்த பிரச்சினை தீரும். சின்ன பிரச்சினை என்றால் அவரிடம் கொடுக்கலாம். பெரிய பிரச்சினை என்றால் அமைச்சர்கள், முதல்வரிடம் கொடுக்கலாம். ஸ்டாலின் மனு வாங்கி என்ன செய்ய முடியும். பாராளுமன்ற தேர்தலின் போது ஏராளமான பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டார். கல்விக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி என்றெல்லாம் சொன்னார். விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் தருவதாக சொன்னார்கள். வருடத்திற்கு ரூ. 72 ஆயிரம் தருவதாகவும் இவர்கள் சொன்னார்கள். இப்படி பொய்யெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றினார்கள். ஆனால் வேலூர் தொகுதியில் தேர்தல் நடந்த போது மக்கள் உண்மையை புரிந்து கொண்டு விட்டார்கள். இனி மக்களை ஏமாற்ற முடியாது. எனவே உங்களுக்கு நன்மை செய்யக் கூடிய அ.தி.மு.க வேட்பாளருக்கு வாக்களித்து அமோக வெற்றி தேடி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பிறகு நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் முதல்வர் எடப்பாடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.
இன்றும் பிரச்சாரம்
நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்ப்பட்டி நாராயணனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சூறாவளி பிரசாரம் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் 3 மணிக்கு களக்காடு ஒன்றியத்தில் உள்ள ஏர்வாடி பேரூராட்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதையடுத்து திருக்குறுங்குடி பேரூராட்சி, மாவடி, களக்காடு பேரூராட்சி, சிங்கிகுளம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதன் பின்னர் வரும் 18-ம் தேதி மாலை 3 மணிக்கு பாளையங்கோட்டை ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து முன்னீர்பாளையம், கிருஷ்ணாபுரம், கே.டி.சி.நகர், சீவலப்புரி ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில்...
இதற்கிடையே விக்கிரவாண்டியில் வரும் 16-ம் தேதி காணை மற்றும் கோலியனூர் ஆகிய ஒன்றியத்தில் உள்ள 6 இடங்களிலும் 17-ம் தேதி கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள விராட்டிக்குப்பம், விக்கிரவாண்டி மற்றும் காணை ஒன்றியங்களில் உள்ள தும்பூர், முட்டத்தூர், பனைமலை அன்னியூர் மற்றும் கடையம் ஆகிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.