முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

புதன்கிழமை, 16 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டது.வடகிழக்கு பருவமழை கேரளாவில் அடுத்த 3 நாட்களில் தொடங்கும் என்று கேரள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யுமென்றும் அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 9 மாவட்டங்களிலும் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. இதையடுத்து 9 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யுமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் மழை பெய்யும் போது கடலில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்புக்குழுவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறையினரும் மாநிலத்தில் உள்ள அணைகள், குளங்களை கண்காணித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து