முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் மகராஷ்டிரா: மன்மோகன்சிங்

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : மகராஷ்டிர மாநிலம் இதுவரை சந்திக்காத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது, விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை பெரிய அளவில் மகராஷ்டிர மாநிலத்தை உலுக்கி எடுக்கிறது என முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது:

பி.எம்.சி. வங்கியில் நிகழ்ந்துள்ள மோசடி மிகவும் துரதிருஷ்டவசமானது. என்ன நடந்து இருந்தாலும் அந்த வங்கியின் 16 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மகராஷ்டிர முதல்வர், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நி்ரமலா சீதாராமன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோலவே ரிசர்வ் வங்கி, மத்திய அரசு, மகராஷ்டிர அரசு ஆகியவை இணைந்து பி.எம்.சி. வங்கி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மகராஷ்டிர மாநிலம் இதுவரை சந்திக்காத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மகராஷ்டிர மாநிலத்தின் உற்பத்தி விகிதம் தொடர்ந்து 4-வது ஆண்டாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து