எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு காரணமே கருணாநிதியும், ஸ்டாலினும்தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த பிரச்சாரத்தின் போது குற்றம் சாட்டினார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முத்தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே இத்தொகுதியில் 2 நாள் பிரச்சாரம் செய்தார். நேற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் முதல்வர் எடப்பாடி தும்பூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். திறந்த வேனில் நின்றபடி அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,
தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க. ஸ்டாலின் பேசும் போது, நாங்கள் பொய் சொல்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நாங்கள் புள்ளி விவரத்தோடு பேசுகிறோம். அரசின் சாதனைகளை ஆதாரத்தோடு பட்டியலிட்டு பேசி வருகிறேன். அருமையான சாலைகளை அமைத்திருக்கிறோம். உள்கட்டமைப்பு வசதிகள் இங்கு சிறப்பாக உள்ளது. ஆனால் மு.க. ஸ்டாலினோ பச்சைப் பொய்களை அவிழ்த்து விடுகிறார்.
நீட் தேர்வுக்கு தி.மு.க. - காங்கிரசே காரணம்:
நீட் தேர்வை நாங்கள் அறிவித்ததாக சொல்கிறார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் நாங்களோ அதற்கு முழு விலக்கு கேட்டு போராடினோம். தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அது நிலுவையிலும் இருக்கிறது. ஆக, நீட் தேர்வுக்கு எதிராக அத்தனை நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்துள்ளது. ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிதான். இதை ஸ்டாலினால் மறுக்க முடியுமா?
கருணாநிதியும், ஸ்டாலினும் காரணம்
அது மட்டுமல்ல, அம்மா மரணத்தை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று கூசாமல் பொய் சொல்கிறார். மறைந்த முதல்வர் அம்மா மீது பொய் வழக்குகளை போட்டது தி.மு.க.தான். அதனால்தான் அவரது உடல்நலமே பாதிக்கப்பட்டது. அம்மாவை பழிவாங்க பல நடவடிக்கைகளை எடுத்தது தி.மு.க.தான். எனவே அம்மாவை பற்றி பேச தி.மு.க.வுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. ஆடு நனையுதே என்று ஓணாய் அழுத கதையாக உள்ளது. அம்மாவின் இறப்புக்கு காரணமே அன்றைய தி.மு.க. தலைவர் கருணாநிதியும், இன்றைய தி.மு.க. தலைவர் ஸ்டாலினும்தான். நிரபராதி என்று கோர்ட்டில் அறிவிக்கப்பட்ட பிறகும் மேல்முறையீடு செய்தவர்கள் இவர்கள். ஆனால் நாங்கள் அம்மா மரண விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைத்தோம். எனவே ஸ்டாலின் அரசியல் ஆதாயத்துக்காக மக்களை குழப்புகிறார். பொய் பேசுவது தி.மு.க.வுக்கு கைவந்த கலை.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியவர் ஸ்டாலின். 5 சவரனுக்கு கீழே உள்ள அடமான நகைகள் திருப்பி தரப்படும் என்று சொன்னார். அப்படி சொன்னவாறு திருப்பி தந்தாரா? தேர்ந்தெடுக்கப்பட்ட 38 தி.மு.க. எம்.பி.க்களும் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என்கிறார். ஆனால் 26.09.2016 அன்று உள்ளாட்சி தேர்தல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டோம். ஆனால் தி.மு.க. இட ஒதுக்கீட்டை காரணம் காட்டி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடை வாங்கியது. ஆக, உள்ளாட்சி தேர்தல் தாமதமாக நாங்கள் காரணமல்ல.
2019-ம் ஆண்டு இறுதிக்குள்...
2019-ம் ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்பார்கள். இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவே தாமதம் ஏற்பட்டது. மேலும் எல்லாமே சரி செய்யப்பட்டு விட்டது. ஆனால் மு.க. ஸ்டாலின் போகிற இடமெல்லாம் தோல்வி பயத்தில்,தோல்வியின் விளிம்பில் ஏதேதோ பேசுகிறார்.
அ.தி.மு.க ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லையாம். நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏரிகள் அனைத்தும் நிரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சொட்டு நீர் கூட வீணாகாத வகையில் பாடுபட்டு வருகிறோம். ஆனால் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது என்ன செய்தார்? தேர்தல் வரும்போதுதான் அவருக்கு திண்ணை ஞாபகம் வருகிறது. எனவே அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.