முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 14 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர், பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக்கவுன்சிலின் ஊதிய அடிப்படையில் பணியாற்றுவோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்கள் அனைவருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என்று அரசு செயலாளர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 9 சதவீத அகவிலைப்படி உயர்வு 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது அது 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 5 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். ஜூலை 1-ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதன்படி புதிய அகவிலைப்படி உயர்வை சாதாரண அரசு உதவியாளர் ரூ. 785 வீதம் மூன்று மாதங்களுக்கு மூன்று மாதங்களுக்கு 2 ஆயிரத்து 325 ரூபாயும் அதிகாரிகளுக்கு மூன்று மாதங்களுக்கு 10 ஆயிரமும் அகவிலைப்படி உயர்வாக கிடைக்கும். இந்த அகவிலைப்படி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத 14 லட்சம் பேருக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து