எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டு அவரை தாங்க முடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கியவர்களை அரசியல் ரீதியாக தண்டிக்க தேர்தல் களம்தான் சரியான வாய்ப்பு என்றும் இந்த இடைத்தேர்தல் மூலம் அரசியல் ரீதியாக அவர்களை தண்டியுங்கள் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
நாளை 21-ம் தேதி நடைபெற இருக்கும் உங்கள் தொகுதிகளின் இடைத் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை அ.தி.மு.க.வின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் அளித்திடக் கேட்டு, உங்களை நேரில் சந்திக்க நாங்கள் வந்திருந்த நேரம் நீங்கள் அளித்த பாசமிகு வரவேற்புக்கு நன்றி கூறி மகிழ்கிறோம். எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் இரண்டு தொகுதி வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், எங்கள் இருவருக்கு மட்டுமின்றி, அ.தி.மு.க.வின் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரி தொகுதி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோருக்கும், அவர்களோடு தேர்தல் பணி ஆற்றிய கட்சியின் தொண்டர்களுக்கு உடன்பிறப்புகளுக்கு வழங்கிய ஒத்துழைப்பும், வரவேற்பும் அ.தி.மு.க. வெற்றிக்கு முன்னறிவிப்புகளாக இருந்தன. இத்தகைய பேரன்புக்குரிய வாக்காளப் பெருமக்களுக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
விக்கிரவாண்டி தொகுதியிலும், நாங்குநேரி தொகுதியிலும் நீங்கள் பெருவாரியான எண்ணிக்கையில் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும்போது, அது ஜெயலலிதா அமைத்துத் தந்த அ.தி.மு.க. அரசுக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்திடும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியல் களத்திலும், அறிவின் மேன்மையிலும், உழைப்பின் மாட்சியிலும் தன்னை நேருக்கு நேராக சந்திக்கும் திறன் அற்ற விரோதிகளும், துரோகிகளும் தனக்கு எதிராக நடத்திய அத்தனை தாக்குதல்களையும், தன் மீது புனையப்பட்ட அத்தனை பொய் வழக்குகளையும் துணிவுடன் எதிர்கொண்டார். அந்த நெடிய போராட்டத்தில் தன்னுடைய உடல் நலனை பாதுகாக்காமல் நம்மையெல்லாம் விட்டு விட்டுச் சென்று விட்டாரே என்பதை நினைக்கும் போது நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கிறது.
ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டு அவரை தாங்க முடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கியவர்களை அரசியல் ரீதியாக தண்டிக்க தேர்தல் களம்தான் சரியான வாய்ப்பு. உங்கள் பொன்னான வாக்குகளை எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிச் சின்னமும், ஜெயலலிதா பாதுகாத்த ஒப்பற்ற சின்னமுமான இரட்டை இலைச் சின்னத்தில் பதிவு செய்வதன் மூலம், ஜெயலலிதாவின் அகால மரணத்துக்கே காரணமானவர்களை நீங்கள் அரசியல் ரீதியாக தண்டிப்பீர்கள் என்பது எங்களது உறுதியான நம்பிக்கை. ஜெயலலிதாவின் வேதனை மிகுந்த மரணத்திற்குப் பிறகு, அவரது முயற்சியாலும், உழைப்பாலும் உருவாக்கப்பட்ட தமிழக அரசை, உங்கள் ஆசி பெற்ற நாங்கள் வெற்றிகரமாக காப்பாற்றி நம் மாநிலத்திற்கு நிலையான அரசை கொடுத்திருக்கிறோம். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நாடு எந்தவித வளர்ச்சியையும் அடைய முடியாது. உறுதியான அரசின் செயல்பாடுகளால்தான் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முடியும். அதை மிகச் சிறப்பாக செய்திருக்கும் அரசாக இன்றைக்கு தமிழக அரசு விளங்குகிறது. அரசின் இந்த வலிமையை உறுதிசெய்யும் வகையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை நீங்கள் மகத்தான வெற்றியடைய செய்யும் போது, அது அரசு நிர்வாகத்தையும், நலத்திட்டப் பணிகளின் செயலாக்கத்தையும் மேலும் பொலிவுடையதாக்கும் என்பதால்தான் உங்கள் மேலான ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகச் சிறப்பாக உள்ளதென்று பொருளாதார வல்லுநர்கள் புள்ளி விவரங்களோடு விவரித்து பூரிக்கின்றனர். புதிய, புதிய தொழில்கள் பல தமிழ் நாட்டில் தொடங்கப்பட்டு நம் பிள்ளைகளுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் உருவாகி கொண்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வாரும் குடிமராமத்துப் பணிகள் செய்யப்பட்டிருப்பதால் அண்மையில் பெய்த மழைநீர் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து நடைபெற இருக்கும் விவசாயப் பணிகளுக்கு இது பெரிதும் உற்சாகமூட்டும். எல்லோருக்கும் பொங்கல் பரிசு வழங்கிய நமது அரசு, வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளோருக்கான சிறப்பு உதவித் தொகையையும் அளித்திருக்கிறது. அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுவோருக்கும் வழங்கப்பட வேண்டிய அனைத்துப் பயன்களும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான சீன அதிபரை, பிரதமர் சந்தித்துப் பேச தமிழ்நாடே சிறந்த இடம் என்று இந்திய அரசே முடிவு செய்யும் அளவிற்கு பொது அமைதியும், சட்டம்-ஒழுங்கும் சிறப்பாக தமிழ் நாட்டில் காப்பாற்றப்படுவதை உலகமே பாராட்டுகிறது. இத்தனை சிறப்புக்குரிய ஆட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கவே உங்கள் அன்பான ஆதரவை வேண்டுகிறோம். தேர்தல் களத்தில் நம்மை எதிர்ப்போர் யார் என்று பாருங்கள். எப்படியாவது பதவிக்கு வந்து விட வேண்டும். குடும்ப அரசியலை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே கொள்கை கொண்ட கூட்டமே நம்மை எதிர்த்து நிற்கிறது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று துடிக்கும் தி.மு.க. ஆட்சியில் நடந்த அராஜகங்களையும், கட்டப் பஞ்சாயத்துகளையும், சாதிச் சண்டைகளையும், தமிழ் நாட்டையே முடக்கிப் போட்ட, இருள் பரப்பிய மின்வெட்டுகளையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். நில அபகரிப்பு, அரசு ஊழியர்கள் நிம்மதியாக பணியாற்ற முடியாத அச்சுறுத்தல், ஒரு குடும்பத்தின் அசுரப் பிடியில் தமிழ் நாட்டின் மொத்த நிர்வாகமும் சிக்கித் தவித்த கொடுமை எல்லாம் இப்போது இல்லை.
இப்போது நடைபெறுவது அன்பும், பாசமும், கருணையும் கொண்ட அரசு. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது அன்புத் தொண்டர்களால் வழிநடத்தப்படும் உண்மையான மக்கள் அரசு. மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்ற எந்நேரமும் பாடுபடும் இந்த அரசு தொடர வாக்களிப்பீர் இரட்டை இலைச் சின்னத்திற்கே! வளர்ச்சிக்கு வாக்களிப்பீர்! வன்முறை கும்பலை புறந்தள்ளுவீர்! இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.