முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் மாநில பல்கலைக் கழகங்களிடையே நீச்சல் போட்டி!!

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்,-ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் மாநில பல்கலைக் கழகங்களிடையே நீச்சல் போட்டி!!  நடைபெற்றது
ஆடவர் பிரிவில் அண்ணா பல்கலையும், மகளிர் பிரிவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையும் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்றன!!
ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் மாநில நீச்சல் போட்டி துவக்கவிழா துணைத்தலைவர் முனைவர் எஸ் சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
பல்கலை பதிவாளர் முனைவர். வி. வாசுதேவன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாநில விளையாட்டு மேலாளர் வி. வீரபுத்திரர் 100 மீ ப்ரீ ஸ்டோக் முதல் போட்டியை துவக்கி வைத்தார். மொத்தம் 14 பல்கலையிலிருந்து 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை, சிதம்பரம் ஊர்களிலிருந்து இந்த இரண்டு நாள் போட்டியில் பல்வேறு எட்டு விதங்களில் நீச்சலில் கலந்து கொள்கிறார்கள்.
பல்கலை விளையாட்டு துறை அதிகாரிகள், எஸ். பிளஸ்ஸி, செல்வகணேஷ், சித்ரா, உதயகுமார் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
100 ப்ரீ ஸ்டைல், மாணவிகள் போட்டியில், முதலாம் இடம், சென்னை பல்கலை ஆர்.சி. வதேஜாவும், இரண்டாம் இடம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை   எஸ். வீரலட்சுமிக்கும், மூன்றாம் இடம் கலசலிங்கம் பல்கலைக் கழக நர்மதாவிற்கும், பதிவாளர் முனைவர். வாசுதேவன் மெடல்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்த இரண்டு நாள் போட்டிகளில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் எட்டு மெடல்களை பெற்று வெற்றி பெற்றனர்.
ஆடவர் பிரிவில் அண்ணா பல்கலையும், மகளிர் பிரிவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையும் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்றன.
சாம்பியன் கோப்பையை மாநில விளையாட்டு மேலாளர் வி.வீரபுத்திரர் வழங்கி பாராட்டினார்.
உடற்கல்வி இயக்குனர் சித்ரா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து