முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பதவி விலக கோரி லெபனானில் 6 - வது நாளாக தொடரும் போராட்டம்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

லெபனான் : லெபனானில் அரசு பதவி விலக வேண்டும் என்று ஆறாவது நாளகாக தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லெபனானில் நிலவும் ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்தல், டயர்களை எரித்தல் போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் ஆறாவது நாளாக நீடித்து வருகிறது. எங்கள் பணத்தை திரும்ப தாருங்கள் என்று தலைநகர் பெய்ரூட் போராட்டக்காரர்கள் முகத்தில் வித்தியாசமான ஒப்பனைகளை செய்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட 19 வயதான மாணவர் ஒருவர் கூறும் போது, நாங்கள் அரசு மீதும் , அரசு அதிகாரிகள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம் என்றார். லெபனானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றறும் பிரதமர் சாத் அல் ஹரிரி 2020-ம் ஆண்டு பட்ஜெட் விவாதக் கூட்டத்தை ரத்து செய்ததை தொடர்ந்து அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை போராட்டக்காரர்கள் தொடங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து