முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கி - சிரிய எல்லையில் இருந்து குர்து படைகள் வெளியேற்றப்படும் - புடின் - எர்டோகன் ஒப்பந்தம்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

சோக்சி : துருக்கியும் ரஷ்யாவும் இணைந்து குர்து படை வீரர்களை துருக்கி - சிரிய எல்லையிலிருந்து வெளியேற்றும் என்று புடினும், எர்டோகனும் பேச்சுவார்த்தையின் முடிவில் தெரிவித்துள்ளனர்.

5 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியாவின் வடக்குப் பகுதியில் நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது தொடர்பாக எர்டோகனும், புதினும் சோச்சி நகரில் உள்ள பிளாக் ஸி விடுதியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இருவருக்கும் இடையே சுமார் 7 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அல் ஜசிரா செய்தி வெளியிட்டுள்ளது. அல் ஜசிரா வெளியிட்ட செய்தியில்,

துருக்கி - சிரிய எல்லைப் பகுதியில் குர்து படைகள் முழுவதுமாக வெளியேற்றப்படும் என்று ரஷ்ய அதிபர் புடினும், துருக்கி அதிபர் எர்டோகன் பேச்சுவார்த்தையின் முடிவில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடின், சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்திடம் பேசியுள்ளதாகவும், சிரிய எல்லையில் ரஷ்ய படைகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் ஆசாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோர பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு துருக்கி சம்மதம் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து