முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்: ஜெயகுமார்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள், 200 நாட்டிக்கல் மைல் தாண்டி ஒரு மாதத்திற்கும் மேல் தங்கி தொழில் செய்வார்கள். அவர்கள் அவ்வாறு செல்லும் போது, புயல் எச்சரிக்கை அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் வழங்கும். அதற்காக, இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஒரு குழுவுக்கு 2 சாட்டிலைட்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சாட்டிலைட் போன் ஒன்றின் விலை ரூ. ஒரு லட்சம் ஆகும். சாட்டிலைட் போன்கள் மூலமாக வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் தகவல்களால், மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுவர். இதன் மூலம் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்படும். இதற்கான கட்டுப்பாட்டு அறையை இன்று ( நேற்று) திறந்து வைத்துள்ளோம். அதன்மூலம், தமிழகத்தில் உள்ள எல்லா மீன்பிடித் துறைமுகங்களுடனும் தொடர்பு கொள்ள முடியும். இந்த நவீன தொழில்நுட்பம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். மேலும், www.tnfisheries.gov.in என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளோம். அதில், மீனவர்கள் குறித்த எல்லா விதமான தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து