முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்துக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு - டோனி, விராட் கோலி இடம்பெறவில்லை

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : வங்காளதேசத்துக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விராட் கோலி இடம்பெறவில்லை.

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நவம்பர் 3-ம் தேதி முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியும், 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முறையே ராஜ்கோட் மற்றும் நாக்பூரில் 2-வது 3-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  15 பேர் கொண்ட இந்திய அணியில், கேப்டன் விராட் கோலி இடம் பெறவில்லை.  தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருவதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல் ராகுல், சஞ்சு சாம்சன்,  ஷ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), க்ருணல் பாண்ட்யா, ரகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அகமது, ஷிவம் துபே, சர்துல் தாகூர். இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி, இந்தத் தொடரில் இடம் பெறாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து