முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் வெற்றி பெற்றால் சிறையில் உள்ள விடுதலைப்புலிகள் விடுதலை - கோதபய ராஜபக்சே சொல்கிறார்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் சிறையில் இருக்கும் விடுதலைப்புலிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அதிபர் வேட்பாளர் கோதபய ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 16-ம் தேதி நடக்கிறது. இதில் ஆளுங்கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசா, எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோதபய உள்பட 35 பேர் போட்டியிடுகிறார்கள். இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் கோதபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையில், இலங்கையில் நடந்த போரின் போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் விடுதலைப்புலிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதில் போரின் போது சரணடைந்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளுக்கு மன்னிப்பு, விடுதலை, புனர்வாழ்வு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதுபோன்ற நடவடிக்கை போரின் போது குற்றத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது சிறையில் இருக்கும் ராணுவ வீரர்கள், விடுதலைப்புலிகளுக்கு முறையான புனர்வாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோதபய ராஜபக்சே கூறியதாவது:-

உள்நாட்டு போரின் போது குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருக்கும் அனைத்து ராணுவ வீரர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். அதே போல் சிறையில் இருக்கும் முன்னாள் விடுதலைப் புலிகளும் விடுவிக்கப்படுவார்கள். அவர்களின் புனர் வாழ்வுக்காக ஏற்பாடு செய்யப்படும். இலங்கையில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளை நான் அனுமதிக்க மாட்டேன். தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியா உள்பட சார்க் நாடுகளுடன் நல்லுறவை வளர்க்க பாடுபடுவோம். நாட்டின் கவுரவத்தை காப்பாற்றவும், ஒரு இறையாண்மை கொண்ட நாடாகவும் சம அந்தஸ்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார். கடந்த வாரம் கோத்தபய ராஜபக்சே கூறும் போது, நான் வெற்றி பெற்றால் உள்நாட்டு போர் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. சபையுடன் எந்த ஒப்பந்தமும் போட அனுமதிக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது கோதபய ராஜபக்சே ராணுவ தளபதியாக இருந்தார். அப்போது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து