முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் ஷெரீப்புக்கு மாரடைப்பு மருத்துவமனையில் அனுமதி

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

லாகூர் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் லாகூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2017-ம் ஆண்டு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்குகளில் ஒன்றான அல் அசீசியா ஸ்டீல் ஆலை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலையை கருத்தில் கொண்டு லாகூர் நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் நவாஸ் ஷெரீப்புக்கு தற்போது லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் லாகூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து