முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை, கடந்த 16-ம் தேதி துவங்கியதை அடுத்து, தமிழகத்தின் தென் மாநிலங்கள் மற்றும் மகராஷ்டிராவில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில், தென் மேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது இரண்டு நாட்களில், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும், இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இரண்டு நாட்களுக்கு, பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும் எனவும், மேலும், தென்மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக தென் மாவட்டங்களை ஒட்டிய கடற்பகுதியில், 50 முதல் 60 கிலோ மீட்டர்., வேகத்தில் சூறைக்காற்று வீசும். என்பதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து