முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் இ.பி.எஸ். மாமனார் காளியண்ண கவுண்டர் மறைவு: தெலங்கானா கவர்னர் தமிழிசை இரங்கல்

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ண கவுண்டர் காலமானார். அவரது மறைவுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ண கவுண்டர், சேலம் அம்மா பாளையத்தில் உள்ள சேவூர் கிராமத்தில் கடந்த 27-ம் தேதி மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. காளியண்ண கவுண்டர் மறைவுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர். காளியண்ண கவுண்டர் மறைவுக்கு சேலத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. இளைஞர்அணித்தலைவர் அன்புமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

முதல்வரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் மாமனார் காளியண்ணன் சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இது தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு ஆகும். மாமனாரை இழந்து வாடும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பா.ம.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். காளியண்ண கவுண்டரின் இறுதி சடங்குகள் சேலத்தில் நேற்று நடைபெற்றது. மறைந்த காளியண்ணக்கவுண்டருக்கு பாக்கியம் என்ற மனைவியும், இருமகள்களும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து